Pages

Saturday, April 30, 2016

கோவா பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விருப்பமா...!!


கோவா பல்கலைக்கழகத்தில் ஆய்வக உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், நூலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 6-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

746 பள்ளிகளுக்கு அங்கீகாரம் பறிபோகும் அபாயம்: 8 லட்சம் மாணவர்கள் குழப்பம்


தமிழக மாணவர்களுக்கு சிக்கல் !


மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம்' என, சுப்ரீம் கோர்ட் அறிவித்து ள்ளதால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை, நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், மருத்துவப் படிப்புகளுக்கு, பொது நுழைவுத்தேர்வு முறை ரத்து
செய்யப்பட்டு, 2007 முதல், பிளஸ் 2 மதிப்பெண்ணை வைத்து, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.

திட்டமிட்டப்படி மே 1ல் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்:


உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புது தில்லி: மருத்துவ பொது நுழைவுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்தப்படும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு: மத்திய அரசு யோசனையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு


மே 1 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்தியாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக, மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு இன்று மனு செய்திருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நடப்பு 2016-17-ம் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை மே 1 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்துவது என்பது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த உத்தரவில் உரிய மாற்றம் தேவை எனக் கோரப்பட்டது.

Friday, April 29, 2016

மே 14-இல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.


குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலத் திருவிழாவை முன்னிட்டு, வருகிற மே 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மருத்துவ மாணவர் சேர்க்கை 2016-17-க்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றம் அனுமதி


மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய அளவில் 2016-17 கல்வியாண்டுக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதன் படி மே 1-ம் தேதி முதற்கட்ட நுழைவு தேர்வையும், ஜூலை 24-ம் தேதி 2-ம் கட்ட நுழைவுத் தேர்வையும் நடத்த உத்தரவிட்டதோடு ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் முடிவை வெளியிடவும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பல்வேறு கல்வி மையங்கள் தனித்தனி யாக நுழைவுத்தேர்வு நடத்துவதால் மாணவர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். இதை தடுக்கும் நோக்கத்துடன் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் இணைந்து தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (என்இஇடி) நடத்த முடிவு செய்தன.

விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி: அதிவேக சேவையின் மூலம் அசத்துகிறது பாஸ்போர்ட் துறை


பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி செய்யும் அளவுக்கு பாஸ்போர்ட் துறையின் சேவை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள கீழத் திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கவின். இவனது பெற்றோருக்கு ஏற் கெனவே பாஸ்போர்ட் உள்ளது. மகனுக்கும் பாஸ்போர்ட் எடுக்க முடிவு செய்தனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். விண்ணப்பத் துடன் சிறுவனின் பிறப்புச் சான்றி தழ், பெற்றோரின் பாஸ்போர்ட் நகல் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.

புதிதாக விண்ணப்பித்தவர்களையும் சேர்த்து துணை வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் ராஜேஷ் லக்கானி பேட்டி


புதிதாக விண்ணப்பித்தவர்களை சேர்த்து துணை வாக்காளர் பட்டியல் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–வேட்புமனு நிராகரிக்கப்படும்

வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் கூடுதலாக ஒரு உறுதி மொழி கடிதம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் அரசு குடியிருப்பில் தங்கியிருந்து அதற்கான வாடகை, டெலிபோன் கட்டணம், குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் ஆகியவை பாக்கி இல்லாமல் செலுத்தப்பட்டுள்ளது என்ற வாடகை நிலுவையில்லா சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.உதாரணத்துக்கு எம்.எல்.ஏ விடுதி அல்லது எம்.பி. விடுதிகளில் தங்கியிருந்து அதற்காக வாடகை செலுத்தாதவர்கள், அரசு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து அதற்கான வாடகையை செலுத்தாதவர்கள் நிலுவையில்லா சான்றிதழ் அளிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் அரசு குடியிருப்பில் தங்காதவர்களும் நான் கடந்த 10 ஆண்டுகளில் அரசு குடியிருப்பில் தங்கவில்லை என்ற சான்றிதழையும் அளிக்க வேண்டும். அந்த சான்றிதழை வேட்புமனு தாக்கலின்போது அளிக்க முடியாதவர்கள் கடைசி நாளான நாளைக்குள்(வெள்ளிக்கிழமை) அளிக்க வேண்டும். இல்லையென்றால் வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிக்கப்படும்.

வரும் கல்வி ஆண்டில் புதிதாக 17 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் மந்திரி கிம்மனே ரத்னாகர் தகவல்


வரும் கல்வி ஆண்டில் புதிதாக 17 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மந்திரி கிம்மனே ரத்னாகர் கூறினார்.கல்வித்துறை மந்திரி கிம்மனே ரத்னாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–17 ஆயிரம் ஆசிரியர்கள்
பி.யூ.கல்லூரி கல்வி வாரிய நிர்வாகம் மற்றும் தேர்வாணைய நிர்வாகத்தை தனித்தனியாக பிரித்து அமைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து அறிக்கை வழங்குமாறு துறை உயர் அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிஎப்புக்கு 8.7% வட்டி தரக்கூட நிதியே இல்லை: நிதியமைச்சகம் திடீர் விளக்கம்


பிஎப்புக்கு 8.7 சதவீத வட்டி வழங்கக்கூட நிதியில்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களுக்கு 2015-16 நிதியாண்டுக்கான வட்டியாக 8.8 சதவீதம் அளிக்க வேண்டும் மத்திய அறக்கட்டளை வாரியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் நிதியமைச்சகம் 8.7 சதவீதம் வழங்க ஒப்புதல் அளித்தது.

பிஎப் நிறுவனம் கடந்த 2013-14 மற்றும் 2014-15 நிதியாண்டுகளுக்கான வட்டியாக 8.75 சதவீதம் வழங்கியது. இது 2012-13 நிதியாண்டில் 8.5 சதவீதமாகவும், 2011-12 நிதியாண்டில் 8.25 சதவீதமாகவும் இருந்தது. இதற்கு முன்பு கால் சதவீதம் அளவுக்கு வட்டி உயர்த்தப்பட்டது. அதோடு கடந்த பிப்ரவரி 16ம் தேதி 2015-16க்கான இடைக்கால பிஎப் வட்டி விகிதமாக 8.8 சதவீதமாக முடிவு செய்யப்பட்டது. இந்த இடைக்கால வட்டியை கூட தர மறுத்துள்ளது நிதியமைச்சகம். இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.

Thursday, April 28, 2016

நிலுவை ஊதியம் ஒரு இலட்சத்திற்கு மேலாக உள்ள பட்டியலுக்கு தொடக்கக்கல்வி இயக்குநரின் ஒப்புதலின்றி செலவினம் மேற்கொள்ளக்கூடாது - நிதி ஒதிக்கீட்டிற்கு மேல் செலவினம் மேற்கொள்ளப்படுவதால் தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.


ALAGAPPA UNIVERSITY FREE COACHING CLASSES FOR UGC-NET 2016 EXAMINATION


மெட்ராஸ் ஐஐடி நடத்தும் எச்எஸ்இஇ தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிப்பு...!!


மெட்ராஸ் ஐஐடி நடத்தும் ஹிமானிடீஸ் அண்ட் சோஷியல் சயின்ஸஸ் நுழைவுத் தேர்வு (எச்எஸ்இஇ) முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுகள் கடந்த 17-ம் தேதி நடைபெற்றன. இந்தத் தேர்வு முடிவுகள் மே 11-ம் தேதி வெளியாகும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

EMIS UPDATION உதவிக்கு மாவட்ட வாரியாக ஒருங்கிணைபாளர்கள் அறிவிப்பு.


பள்ளிகள் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் !


இன்னும், ஓராண்டு கழித்து வரவுள்ள பொதுத் தேர்வு காய்ச்சல், பள்ளிகளை ஆட்கொண்டுள்ளதால், கோடை விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் எப்போது?- ஓரிரு நாளில் அதிகாரபூர்வ அறிவிப்பு


பிளஸ்-2 தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 15-ல் ஆரம்பித்து ஏப்ரல்11-ம் தேதி நிறைவடைந்தது. பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப் பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் அரசு தகவல் தொகுப்பு விவர மையத் தில் முழுவீச்சில் நடைபெற்று வரு கின்றன. எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடையும் நிலையில்தான் உள்ளது.

TNOU - UG,PG,B.Ed&B.Ed Timetable & B.Ed -2016 IV Counselling List


Tamilnadu Open University

▪UG,PG,B.Ed&B.Ed (SE) Timetable for Term End Examination June -2016 Published

Download in www.tnou.ac.in

▪B.Ed -2016 IV Counselling List (Tamil Medium) on 06.05.2016 @8.30AM

Avail in www.tnou.ac.in

Wednesday, April 27, 2016

முதுகலை பட்டதாரிகளுக்கு அரிசி ஆராய்ச்சி மையத்தில் பணி


கட்டாக்கில் செயல்பட்டு வரும் தேசிய அரிசி ஆராய்ச்சி மையத்தில் (National Rice Research Institute) நிரப்பப்பட உள்ள SRF பணிக்கு தாவரவியல் துறையைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மதிப்பெண் குறைவை காரணம் காட்டி வேறு பள்ளிகளுக்கு அனுப்ப கூடாது.

அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க வேண்டும் கல்வித்துறை உத்தரவு.
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை10சதவீதம் அதிகரிக்க உத்தரவு. வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை10சதவீதம் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசுப்பள்ளிகளில் கடந்த ஆண்டை விட வரும் ஆண்டில்10சதவீதம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பள்ளிகள் திறக்கும்நாளில் மாணவர்,ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் வகையில்வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பஸ் பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள்,ஆங்கில வழிக் கல்வித்தரம்,வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்,கடந்தாண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம்,வளர்ச்சி குறித்து பெற்றோருக்கு எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.

வாக்குப்பதிவு மையங்களில் கூடுதல் அலுவலர் நியமனம் செய்ய கோரிக்கை


வாக்குப்பதிவு மையங்களில் கூடுதலாக ஒரு நிலை அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அமைப்பின் மாநிலச் செயலர்கள் சோ. முருகேசன், மு. மணிமேகலை, மாவட்டச் செயலர் செ. பால்ராஜ், தலைவர் பி. ராஜ்குமார், பொருளாளர் சே. சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மு. கருணாகரனிடம் வழங்கினர்.

தொடக்ககல்வி - EMIS ONLINE UPDATION 29/04/2016 குள் அனைத்து பள்ளிகளும் முடிக்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்

தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை ,செய்ய கூடாதவை !!! 100% தபால் ஓட்டு பதிவிற்காக........


தபால் ஓட்டு பதிவு செய்யும் போது  கவனிக்க  ...

முதலில்  கட்சிகளின் சின்னம்  அடங்கிய  துண்டு  சீட்டில் தங்களுக்கு  பிடித்த  சின்னத்துக்கு அருகில்  ✅       டிக் அடிக்க  வேண்டும் .

***** நாம்  அடிக்கின்ற டிக் பக்கத்தில்  இருக்கும்  சின்னத்தில் படாமல் பார்த்துக்  கொள்ள வேண்டும

்*****டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற rose color office cover ல் வைத்து ஒட்ட வேண்டும்.

***stable பண்ணக்கூடாது.*

Tuesday, April 26, 2016

ELECTION-2016:வாக்குச்சாவடி அலுவலர்(PO) - மண்டல அலுவலரிடம்(zonal officer) ஒப்படைக்க வேண்டிய பொருள்கள் என்னென்ன?


வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கீழ் கண்ட பொருள்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்:        
                         பகுதி - I

1. வாக்குப் பதிவு இயந்திரம் 1/2/3 2. வாக்குப் பதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவி - 1 (இவற்றை முறையாக மூடி, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மெட்டல் சீல் வைக்க வேண்டும். முகவர்களும் முத்திரை வைக்கலாம்)  

                          பகுதி - II

அடுத்த ஆண்டுக்குள் புதிதாக 2 லட்சம் மத்திய அரசுப் பணிகள்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்


அடுத்த ஆண்டுக்குள் (2017) புதிதாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:

மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்?



பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரு தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 23ல் முடிந்தது.
முதுங்கலை படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதியை அறிவித்தது அண்ணா பல்கலை

சென்னை:முதுகலை படிப்புக்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.முதுகலை படிக்கு மே 2 முதல் 17-ம் தேதி வரை இணையதளம் வழியாக நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்கலாம்.

ஜூன், 11ல், 'டான் செட்' நுழைவுத் தேர்வு !


அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்புகளில் சேர, ஜூன், 11ல், 'டான் செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., போன்ற முதுநிலை
படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்பில் சேர, ஜூன், 12ல், 'டான்செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, ஜூன், 11ல் நுழைவுத் தேர்வு நடக்கிறது.

மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் !


அரசு பள்ளிகளில்,கடந்தாண்டை விட, 10சதவீதம் வரை,மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என,தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோடை காலத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து,தலைமை
ஆசிரியர்களுக்கு,பள்ளி கல்வித்துறை சார்பில்,அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் குழந்தைகளை கண்காணிக்க புதிய நடைமுறை !



நாடு முழுவதிலுமுள்ள சுமார் 20 கோடி பள்ளிக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளை அடையாளம் காணவும் உதவும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சனிக்கிழமை
தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வியை மேம்படுத்த மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 20 கோடி பள்ளிக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளை அடையாளம் காணவும் உதவும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தவுள்ளோம்.

எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. போன்ற முதுநிலை படிப்பில் சேர மே 2–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மே 17–ந்தேதி


எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்பில் சேர மே மாதம் 2–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 17–ந்தேதி என்றும் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை மல்லிகா தெரிவித்தார்.மே 2–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

அவசர நேரத்தில் அழைக்க செல்போனில் புதிய வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயம்: மத்திய மந்திரி தகவல்


கடந்த 22-ந்தேதி இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை பற்றி மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று விடுத்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

Monday, April 25, 2016

BLINDER's VOTE ,TENDER VOTE ! BLINDER's VOTE:


கண் பார்வையற்றவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

மின்னணு இயந்திரத்தை தடவிப் பார்த்து, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.

ஓட்டுப்பதிவு நடைமுறைகள் அனைத்தையும் படிவம் ' 17C' யில் பதிவு செய்ய வேண்டும்.

தபால் வாக்குச் சீட்டில் வாக்கப்பளிப்பது எப்படி?


பகுதி நேர பி.இ., பி.டெக்.: ஏப்ரல் 25 முதல் விண்ணப்பிக்கலாம் !


பகுதி நேர பொறியியல் (பி.இ., பி.டெக்.) படிப்புகளில் சேர விரும்புவோர் ஏப்ரல் 25 முதல் மே 9 வரை விண்ணப்பிக்கலாம். 2016-17ஆம் கல்வியாண்டில் பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர பாலிடெக்னிக் முடித்து, பணியில் இருப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவர்கள்
படிப்புக்குப் பிறகு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்தவராகவும் இருக்க வேண்டும். கோவை, சேலம், திருநெல்வேலி, பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோவை தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய 9 கல்லூரிகளில் இந்தப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

CTET தேர்வு முடிவுகள் மே -8 ல் வெளியாகிறது !


சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ம் தேதி வெளியாகின்றன.
இது ஹரியாணா மாநிலத்துக்கான ஆசிரியர் தகுதித் தேர்வாகும். இந்தத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. அப்போது ஹரியாணா நிலத்தில் நிர்வாகக் 
கோளாறு காரணமாக இந்தத் தேர்வு நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து ஹரியாணா மாநிலத்துக்காக தனியாக மே 8-ம் தேதி இந்தத் தேர்வுகளை நடத்தவுள்ளது சிபிஎஸ்இ.

அரசு ஊழியர்கள் பொது தேர்தல் நடத்தை விதிமுறைகள் கீழ் கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


Saturday, April 23, 2016

பல்கலை தேர்வு தேதி நீட்டிப்பு !


மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக்கல்வி மாணவர்களுக்கு மே 25ல் துவங்கும்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 2ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.பல்கலை கூடுதல் தேர்வாணையர் பி.டி.மனோகரன் தெரிவித்துள்ளதாவது:

மே இறுதிக்குள் பள்ளி பஸ்கள் ஆய்வு.


அனைத்து பள்ளி,கல்லூரி பஸ்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தி,மே இறுதிக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும்என,ஆர்.டி.ஓ.,அலுவலகங்களுக்கு,தமிழக போக்குவரத்து துறைஉத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளி,கல்லூரிகளில், 37ஆயிரத்து, 105வாகனங்கள் இயங்குகின்றன. பள்ளி,கல்லூரி வாகனங்களுக்கு,போக்குவரத்து துறை பல விதிமுறைகளை வகுத்துள்ளது.

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு பெறுவோர்க்கு, பதவி உயர்வில் ஊதிய நிர்ணயம் செய்தல்- தொடக்கக் கல்வி இயக்குனரின் தெளிவுரை

மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் அப்பிளிகேசன் !!!


திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி கணினித்துறை மாணவர்கள் மாதிரி ஆப்பரேஷன் மென்பொருள் கண்டுபிடித்துள்ளனர்.
மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க இறந்தவர்களின் உடல்களை உரிமையாளர்களின் அனுமதியுடன் பெற்று அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் உடற் பாகங்கள்
குறித்து பாடம் நடத்துவர். இறந்தவர் உடலை பயன்படுத்தி நேரடியாக அறுவை சிகிச்சை பயிற்சி அளிக்கும் முறை இந்தியாவில் மட்டுமே அதிகளவில் உள்ளது.வெளிநாடுகளில், அதற்கென பிரத்யேக வீடியோக்கள், நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மென்பொருள் மூலம் அறுவை சிகிச்சையை வீட்டில் இருந்தபடியே செய்து கற்றுக் கொள்கின்றனர்.

வாக்கு சாவடி விவரங்களை பெற எளிமையான வழி


வாக்கு சாவடி விவரங்களை பெற எளிமையான வழி

உங்களுடைய

தொகுதி பெயர்,

தொகுதி எண்,

வாக்கு சாவடி பாகம் எண்,

வாக்காளர் பட்டியல் வரிசை எண்
ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டுமா???

National ICT Award for school Teachers-2016 Advertisement


புதிய பென்ஷன் திட்டத்தில் இரு கணக்கு எண்களால் குழப்பம் சீரமைக்கும் கருவூலத்துறை


புதிய பென்ஷன் திட்டத்தில் சில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இரு கணக்கு எண் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில் 2003 ஏப்., 1ல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத்தொகை ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை.

பள்ளிக்கல்வி - ICT AWARD 2016 - கணினி வழி கற்பித்தலில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களிடம் இருந்து ICT AWARD காண விண்ணப்பங்கள் வரவேற்பு - இயக்குனர் செயல்முறைகள்

Friday, April 22, 2016

G.O No. 117 Dt: April 20, 2016 படிகள் - அகவிலைப்படி - 01.01.2016 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நேற்று வெளியிட்டது.


4 ஆயிரத்து 33 பேர் பிரதானத் தேர்வினை எழுதுவதர்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். பிரதானத் தேர்வு ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து, தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு:

குரூப் 1 தொகுதியில் 74 காலிப் பணியிடங்கள் இருந்தன. இந்த இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 8 இல் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 696 பேர் கலந்து கொண்டனர்.

மூன்றாம் பருவத்தேர்வு (இன்று முதல்) கால அட்டவணை.....


மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை.....

22.04.16 - தமிழ்

25.04.16 - ஆங்கிலம்

26.04.16 - கணக்கு

27.04.16 - அறிவியல்

28.04.16 - சமூக அறிவியல்

29.04.16 - உடற்கல்வி,    
                   கலைக்கல்வி

30.04.2016 - ஆண்டு இறுதி
                       வேலை நாள்

தேசிய திறந்தவெளி பள்ளியில் அதிகாரி பணி


தேசிய திறந்தவெளி பள்ளியில் காலியாக அதிகாரி பணயிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்k விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

G.O No. 118 நிதித்துறை Dt: April 20, 2016 ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-1-2016ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.


மாணவர்கள் ’ஐ.ஜி.சி.எஸ்.இ’ படிப்பை தேர்வு செய்வது ஏன்?



மதுரை- - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், காந்திகிராமம் அருகே லக்ஸர் வேர்ல்டு பள்ளி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரே சர்வதேச பள்ளியான இது, ஐந்தாவது ஆண்டை வெற்றிகரமாக துவக்கி உள்ளது. ஐ.ஜி.சி.எஸ்.இ கல்வி முறை உலக மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. இதில் வாய்வழி கற்கும் திறன், விசாரணை திறமை, பிரச்னைகளை சரிசெய்தல்,
குழுவேலை, அறிவு, நினைவுத்திறன், முயற்சிகளை உருவாக்குவது போன்ற திறன்கள் ஊக்குவிக்கப்படுகிறது.
இது உலக அளவில் நிலையான நம்பகத்தன்மை பெற்ற கல்வி முறை. இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளால் பின்பற்றப்படுகிறது. ஐ.ஜி.சி.எஸ்.இ கல்வி, இந்திய பல்கலை கழகங்கள் கூட்டமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்டது. பிரிட்டன் மற்றும் காமன்வெல்த் நாடுகளிலும் உலகளவில் 140க்கும் மேற்பட்ட நாடுகளின் பள்ளி, கல்லுாரி, பல்கலைகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு பள்ளிகளில் 7-ம் வகுப்புக்கு 9-ம் வகுப்பு கேள்வித்தாள் விநியோகம்: தேர்வுகள் ஒத்திவைப்பு


புதுச்சேரியில் 7-ம் வகுப்பு அறிவியல் பாடத் தேர்வுக்கு 9-ம் வகுப்பு கேள்வித்தாளை விநியோகித்தனர். அதிகாரிகளின் குளறுபடியால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் இறுதியாண்டு தேர்வு நடந்து வருகிறது. அதன்படி நேற்று காலை 7-ம் வகுப்பு அறிவியல் பாடத்தேர்வு நடந்தது. இதற்காக மாணவர்களுக்கு கேள்வித்தாள் விநியோகிக்கப்பட்டது. அதைப் பார்த்த மாணவர்கள், இது 7-ம் வகுப்பு கேள்வித்தாள் அல்ல என்று தேர்வு மேற்பார்வை ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து கேள்வித்தாளை பார்த்த ஆசிரியர்கள், உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். தொடர்ந்து ஆய்வு செய்ததில், 9-ம் வகுப்புக்கான கேள்விகள் அச்சிடப்பட்டிருந்தது. இதையடுத்து உடனடியாக தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை உத்தரவிட்டது.

Wednesday, April 20, 2016

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் இலவசமாக பதிவு:


அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைப்பு.
பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் இலவசமாக பதிவுசெய்யும் வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஆன்லைன் பதிவு தொடர்பான விவரங்களை மாணவர்கள் தொலைபேசி மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 686 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு.


மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ( சி.ஆர்.பி.எப்) காலியாக உள்ள 686 ‘ஹெட் கான்ஸ்டபிள்’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி:ஹெட் கான்ஸ்டபிள்
வயது வரம்பு:05.05.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:இன்டர்மீடியட் (10 2) மற்றும் அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் குறிப்பிட்ட வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

மே 9 முதல் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்.


தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் மே 9-ம் தேதி முதல் தொடங்கும் என மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.விண்ணப்பங்களை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில்பெற்றுக்கொள்ளலாம். அல்லது tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மே 27ம் தேதி மாலை5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான தகுதிப் பட்டியல் வரும் ஜூன் 15-ல் வெளியிடப்படும். ஜூலை மாதம் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டைப் போலவே 2655 இடங்கள் காலியாக உள்ளன.

பி.எப். தொகையை எடுப்பதில் கட்டுப்பாடுகள் இல்லை: புதிய விதிமுறை அறிவிக்கையை ரத்து செய்தது மத்திய அரசு


பி.எப். தொகையை மொத்தமாக எடுப்பதை கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

தொழிலாளர்கள் தங்களின் பி.எப். கணக்கில் உள்ள தொகையில் இருந்து தங்களின் தேவைக்கு ஏற்ப வீடு கட்டுதல், மருத்துவ செலவு, திருமணம் தொடர்பான தேவைகளுக்கு பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். மேலும், ஒரு நிறுவனத்தின் வேலையில் இருந்து விலகியபின்னர் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வேலையில்லாமல் இருந்தால், அவர் தனது பி.எப். கணக்கில் உள்ள முழு தொகையையும் திரும்பப் பெற முடியும்.

ஆசி-ரி-ய-ர்-க-ளுக்கு இயக்குனரகம் தடை


ராமநாதபுரம் : விடைத்தாள் திருத்தும் மையங்களில், ஆசிரியர்கள் வாயிற்கூட்டம் நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தடை விதித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 15ம் தேதி துவங்கி, ஏப்., 13ம் தேதி நிறைவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 16ம் தேதி துவங்கியது.

CBSE - NOTIFICATION - THE BURDEN OF LEARNING - HEAVY BAGS! SUGGESTIONS TO ALL HEADS OF SCHOOLS


"பள்ளி செல்லா குழந்தைகளின் கல்வி மேம்பாடு கண்காணிக்கப்படுகிறது'


பள்ளி செல்லா குழந்தைகளின் கல்வி மேம்பாடு தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகிறது என அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தெரிவித்தார்.

வீதி, வீதியாகக் கணக்கெடுப்பு: மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும், இலவச கட்டாய கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும்.

Monday, April 18, 2016

டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


தமிழக அரசின்கீழ் செயல்படும் ‘எல்காட்’ நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணிக்கான
அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
வயது வரம்பு:18 முதல் 30. வயது வரம்பு சலுகையும் உண்டு.

உலகில் பார்க்க வேண்டிய இடங்களில் தமிழ்நாட்டிற்கு 24 வது இடம் .


காற்றாலை கைகொடுத்தால் மட்டுமே மே மாதம் தப்பமுடியும் !!!


கடும் வெயில்காரணமாக தமிழகத்தின் தினசரி மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட்டை தொட்டுள்ளது. காற்றாலை மின்சாரம்

கைகொடுத்தால் மட்டுமே மே மாத மின் தேவையை சமாளிக்க முடியும்.கடந்த 15 மாலை தமிழகத்தின் மின் தேவை 14 ஆயிரத்து, 969 மெகாவாட்டாகஅதிகரித்து புதிய வரலாறு படைத்தது.

பள்ளிக்கூடங்களில் விடுமுறை நாட்களில் 10-வது, பிளஸ்-2 வகுப்புகள் நடத்தக்கூடாது அதிகாரி எச்சரிக்கை


பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளை நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தப்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.எச்சரிக்கை தமிழ்நாடு முழுவதும் அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள், தனியார் உயர்நிலைப்பள்ளிகள், தனியார் மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் 2016-2017-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகள் 20 லட்சத்திற்கும் மேல் உள்ளனர்.

பிளஸ் 1லும் 'ஆல் பாஸ்:' ஆசிரியர்கள் குழப்பம்.


பிளஸ் 1 மாணவர்களுக்கு கண்டிப்பாக, 95 சதவீத தேர்ச்சி வழங்க வேண்டும்' என, முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளதால், பள்ளி நிர்வாகங்கள் குழப்பம் அடைந்து உள்ளன. அதனால், பல பள்ளிகள், தேர்ச்சி தகுதி இல்லாத மாணவர்களுக்கு, மாற்று சான்றிதழ் எனப்படும், 'டிசி'யை கட்டாயமாக கொடுத்து வெளியேற்ற முயற்சித்துள்ளன.

இரண்டு நாட்களில் 40 ஆயிரம் பேர் இன்ஜி., படிக்க விண்ணப்பம்.


பொறியியல் படிப்புகளில் சேர, இரண்டு நாட்களில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்துள்ளனர்.

கல்வித் தரத்தை முன்னேற்ற வழிகாட்டுமா கட்சிகள்?


தரமான கல்வியை சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்பது நீண்ட நாளாக, நாடு முழுவதும் பேசப்படுவதாகும். கல்விக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது, கோத்தாரி குழு தெரிவித்த கருத்தாகும்.கல்வியில் கேரளாவும், தமிழகமும் முன்னிற்கின்றன. உயர்நிலைக் கல்வியில் ஆந்திரா முன்னிற்கிறது. இந்தப் பின்னணியில், சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு தரும் நடைமுறை கட்டாயமாகிறது. கல்வி என்பது மாநில அரசின் நிர்வாகப்பட்டியலில் வருவதால், மத்திய அரசால், கல்வித்திறனை அதிகரிப்பதற்கான ஊக்குவிப்பையும் நிதி வசதிகளையும் மட்டுமே தரமுடியும்.

Saturday, April 16, 2016

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்திட வேண்டும்.



ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்திட வேண்டும்.தொடக்கக்கல்வித் துறைக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
வேண்டுகோள்.

 தமிழகத்தில் தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும்
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டத் தலைநகரில் மே
மாதம் கோடை விடுமுறையில் நடத்துவது வழக்கம். ஆனால் இந்தாண்டு; பொது
மாறுதல் கலந்தாய்விற்கான விண்ணப்பத்தை கூட சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம்
இருந்து பெறாமல் கல்வித்துறை காலம் தாழ்த்தி வருகிறது.

வெளிநாட்டில் டாக்டர்கள் படித்த 77 % மாணவர்கள் எம்சிஐ டெஸ்டில் பெயில்!!


வெளிநாடுகளில் மருத்துவ டாக்டர்கள் பட்டம் படித்து இந்தியா திரும்பியுள்ள மாணவர்கள் இங்கு நடந்த இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) டெஸ்டில் தோல்வியுற்றுள்ளனர்.77 சதவீத மாணவர்கள் இந்த மருத்துவத் தேர்வில் தோல்வியுற்று இருப்பது எம்சிஐ அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வெளிநாடுகளில் சென்று மருத்துவப் படிப்பு படித்தாலும் இந்தியாவில் டாக்டர்களாக தொழில் செய்ய வேண்டுமென்றால் எம்சிஐ நடத்தும் தேர்வில் வெற்றி பெறவேண்டும்.

அவ்வாறு எம்சிஐ நடத்திய தேர்வுகளில் 77 சதவீத வெளிநாட்டில் டாக்டர்கள் படித்த மாணவர்கள் பெயிலாகியுள்ளனர்.கடந்த 12 ஆண்டுகளில் நடந்தத் தேர்வு முடிவுகளாகும் இது.இந்தத் தேர்வை எம்சிஐ, நேஷனல் போர்ட் ஆஃப் எக்ஸாமினேஷன்ஸ் (என்பிஇ) உதவியுடன் நடத்துகிறது.தற்போது என்பிஇ கொடுத்த புள்ளி விவரங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

ஆண்டு இறுதியில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்கள்:


1)மதிப்பெண் பதிவேடு
2)தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல்
3)மக்கள் தொகை சுருக்கம்
4)5 குழந்தைகள் பெயர்ப்பட்டியல்
5)இடைநின்றவர் பெயர்ப்பட்டியல்/இன்மை அறிக்கை
6)பள்ளியில்சேராதவர் பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
7)மாற்றுத்திறனாளிகள் பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
8)குழந்தைதொழிலாளர் பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
9) EERசுருக்கம்
10)பள்ளி வேலை நாட்கள் விபரம்
11) கோடைவிடுமுறை அனுமதி
12) ஆசிரியர் கோடை விடுமுறை கால முகவரி விவரம்.
13) 2015-2016 ஆம் கல்வியாண்டு-ஆசிரியர் விடுப்பு விவரம்.

வரும் கல்வி ஆண்டில் மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ. 24 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்


எதிர் வரும் கல்வி ஆண்டு முதல் ஈரோடு மாநகராட்சியில் 10 பள்ளிகளில் ரூ. 24 கோடியில் 12 ஸ்மார்ட் வகுப்புகள்                        தொடங்கப்படவுள்ளன.

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட எஸ்.கே.சி. சாலை நடுநிலைப் பள்ளி, காவிரி சாலை நடுநிலைப் பள்ளி, காளைமாடு சிலை ஆசிரியர் காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளி, ஓடக்காட்டுவலசு மேல்நிலைப் பள்ளி, ஜவுளி நகர் நடுநிலைப் பள்ளி, பி.பி.அக்ரஹாரம் நடுநிலைப்பள்ளி, கருங்கல்பாளையம் காமராஜர்  மேல்நிலைப் பள்ளி, கருங்கல்பாளையம்  மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு ஆசிரியர் காலனி நடுநிலைப் பள்ளி ஆகிய 10 மாநகராட்சிப் பள்ளிகளில் வருகிற கல்வி ஆண்டு முதல் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.இதற்கான பணிகளை கோவை  பியூச்சர் எரா என்ற தனியார் நிறுவனம் செய்து வருகிறது. ரயில்வே காலனி மற்றும் கருங்கல்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தலா 2 வகுப்புகளும், பிற பள்ளிகளில் தலா ஒரு வகுப்பும் என மொத்தம் ரூ. 24 கோடியில் 12 வகுப்புகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

2016-17 ஆம் கல்வியாண்டு 1/6/16 அனைத்து பள்ளிகளும் திறப்பு - பள்ளிக் கல்வி இயக்குனர் செயல்முறைகள் . தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு 1/5/16 அன்று முதல் கோடை விடுமுறை.


பெட்ரோல், டீசல் விலை குறைப்பு !


பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளது.
இதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு 74 பைசாவும், டீசல் லிட்டர் ஒன்றிற்கு ஒரு
ரூபாய் 30 பைசா என்ற அளவிலும் குறைத்துளளது. . இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

சென்னையில் 2 நாட்களில் வெயிலின் அளவு 105.8 டிகிரி வரை உயரக்கூடும்


சென்னையில் அடுத்த 2 நாட்களில் வெயிலின் அளவு 105.8 டிகிரி வரை உயரக்கூடும் என்றும், பகலில் வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.அனல்காற்று வீசுகிறதுஇந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அனல்காற்று வீசிவருகிறது. குறிப்பாக மத்திய மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) வெயில் கொளுத்தி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.வானிலை ஆய்வு மைய தகவலின்படி தற்போது மத்திய பிரதேசம், மராட்டியம், பீகார், ஜார்கண்ட் போன்ற வடமாநிலங்கள் மற்றும் ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடுமையான அனல்காற்று வீசிவருகிறது.

Friday, April 15, 2016

பி.இ. சேர்க்கை: இன்று முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம்


2016-17ஆம் கல்வியாண்டில் பி.இ. சேருவதற்கு www.annauniv\tnea2016.edu என்ற இணையதளம் மூலம் ஆன்-லைன் மூலம் விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் முதல்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை முதல் பதிவு செய்யலாம்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பிறகு 7 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. முதல் முறையாக இந்த வசதியை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்படுத்தியுள்ளது. இதனால், விண்ணப்ப விநியோகம் கிடையாது. பிளஸ்-2 மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான அனைத்து ஆவண நகல்களையும் இணைத்து -"செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை' என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

உயிரிழப்பை தடுக்க மருத்துவ குழுஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்.


தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக, நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்க வேண்டும்' என, ஆசிரியர்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர் சாமி சத்தியமூர்த்தி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:

தேர்தல் பணியை ஆசிரியர்கள் தங்கள் கடமையாக மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அடிப்படை வசதி இல்லாததாலும், நெருக்கடியான வேலைப்பளுவாலும், கடந்த காலங்களில் தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர்கள் சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர், சரியான முதலுதவி மற்றும் மருத்துவச் சிகிச்சை கிடைக்காமல் உயிர் இழந்துள்ளனர். எனவே, இந்த பிரச்னைகளை போக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்த 48 மணி நேரத்தில் கடும் வெயில்: வானிலை மையம்


தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் அதிக வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் இதர பகுதிகில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியல் (98.6 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை (105.8 டிகிரி பாரன்ஹீர் வரை) உயரக் கூடும். எனவே தமிழகத்தின் கடலோரா மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
மேலும், பகல் நேரங்களில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும். சென்னை, அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் பகல் நேரங்களில் அனல்காற்றும், வெப்பமும் அதிகரித்துக் காணப்படும். தமிழகம் முழுவதும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்  என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு: பெற்றோர் அலைச்சல்...!!


பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர் வீண் அலைச்சல் பட்டு வருகின்றனர். பிளஸ் 1, 2 வகுப்புக்கான கணிதம், வரலாறு ஆகிய புத்தகங்கள் மார்க்கெட்டில் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதனால் குழந்தைகளின் பெற்றோர் அந்தப் புத்தகங்களுக்காக மார்க்கெட்
முழுவதும் தேடித் தேடி வீண் அலைச்சல் பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக என்சிஇஆர்டி-க்கும் புகார் அனுப்பப்ட்டுள்ளது.
புத்தகங்கள் விநியோகஸ்தர்களுக்குக் குறைந்த அளவே வந்துள்ளன. இதனால் புத்தகக் கடை விற்பனையாளர்களுக்கும் குறைந்த அளவே புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இருந்தபோதும் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று என்சிஇஆர்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் வழக்கத்தைவிட அதிக வெப்பம் !


இந்தியா முழுவதும் கோடை காலம் துவங்கி வெப்ப அலை வீசுவதால், இந்த கோடைகாலம் வழக்கத்தைவிட கடுமையானதாகியிருக்கிறது.
தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெயிலின் காரணமாக சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் திங்கட்கிழமையன்று 45.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. ஏப்ரல் மாதத்தில் இந்த அளவு வெயில்
அந்நகரத்தில் இருந்தது இதுவே முதல் முறையாகும்.
பருவமழைக்கு முன்பாக இந்தியா முழுவதும் நல்ல வெயில் இருப்பது வழக்கம்தான் என்றாலும் இந்த ஆண்டு இந்தியா முழுவதுமே வழக்கத்தைவிட அதிகமான அளவில் வெயில் அடித்துவருகிறது. அதுவும் குறித்த காலத்திற்கு முன்பாகவே கடும் வெப்பம் நிலவுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசிநாள்: ஆட்சியர் தகவல்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வெள்ளிக்கிழமை கடைசிநாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

Thursday, April 14, 2016

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் கடந்த டிசம்பர் மாதம் 2015 நடத்தப்பட்ட "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் கடந்த டிசம்பர் மாதம் 2015 நடத்தப்பட்ட "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

CBSE - UGC NET (National Eligibility Test) DECEMBER 2015 RESULTS PUBLISHED

Click Here

பி.காம்., 'சீட்'டுக்கு கல்லுாரிகளில் கடும் போட்டி இருக்கும் !



பிளஸ் 2 பொதுத்தேர்வில், வணிகவியல் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் நிலை காணப்படுகிறது.

           எனவே, வரும் கல்வி ஆண்டிலும் பி.காம்., 'சீட்'டுக்கு கல்லுாரிகளில் கடும் போட்டி இருக்கலாம். பிளஸ் 2 பொதுத்தேர்வில், 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு வினாத்தாளில் பல மாற்றங்கள்செய்யப்பட்டன.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 15 வயதுள்ள பெண் குழந்தைகளும் சேரலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு


செல்வமகள் சேமிப்பு கணக்கில் பிறந்த குழந்தைமுதல் 14வயதான சிறுமிகள் வரைஇணையலாம் என்ற நிலை இருந்தது. இனி 15 வயது வரை இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம் என்றுஅஞ்சல் துறை

அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்தியபத்திரிகை தகவல்அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''பெண் குழந்தைகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக செல்வமகள் சேமிப்புத்திட்டம் என்னும் திட்டம் கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்ததிட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் 12லட்சத்து 38 ஆயிரம் கணக்குகள் உள்ளன. சென்னை நகர மண்டல அஞ்சல்வட்டத்தில் 4 லட்சத்து 38 ஆயிரம்கணக்குகள் உள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் பணி


இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) நிரப்பப்பட உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்ங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Manager
காலியிடங்கள்: 05

பணி: Assistant Manager
காலியிடங்கள்: 16

பணி: Assistant Librarian
காலியிடங்கள்: 06

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி


வாசகர்கள் , பார்வையாளர்கள், ஆசிரியர்கள், செய்தியாளர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்


ஐ.ஐ.டி., என்.ஐ.டி., இரண்டும் சமம்!


மத்திய அரசால், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி.,) அதிக முக்கியத்துவம் பெற்று வந்தன!

ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு, சமீபகாலமாக ஏராளமான கல்வி நிறுவனங்களை நிறுவின. தற்போது, ஐ.ஐ.டி.,களுக்கு இணையானதாக என்.ஐ.டி.,களை கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, ஐ.ஐ.டி.,களை விடவும், அதிக நிதியை என்.ஐ.டி.,களுக்கு மத்திய அரசு வழங்கிவருகிறது!

மேலும், இதுவரை என்.ஐ.டி.,களில் சேர ஜே.இ.இ., ,மெயின் எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும்; ஆனால், ஐ.ஐ.டி.,களில் சேர ஜே.இ.இ., மெயின் எழுதியவர்கள் மட்டுமே எழுத தகுதி பெற்ற ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் எழுத வேண்டும். ஆனால், தற்போது இந்த இரண்டு தேர்வுகளுக்கும் இணையாக மதிப்பெண் வழங்கும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.

Wednesday, April 13, 2016

யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காத்திருக்கும் பணியிடங்கள்!!



டெல்லி: யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (யுபிஐ) கம்பெனி செக்கரட்டரி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 28-ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். கம்பெனி செக்கரட்டரி பணியிடங்கள் 2-ம், அதிகாரி (செக்யூரிட்டி) பணியிடங்கள் 5-ம் காலியாகவுள்ளன.

டிசம்பர் மாத -நெட்- தேர்வு முடிவு வெளியீடு: ஜூன் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு முடிவை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியரகள் தனது வாக்கைப் பதிவு செய்ய ... தேர்தல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியரகள் தனது வாக்கைப் பதிவு செய்ய பயன்படுத்தப்படும் படிவம்... நாம் இருக்கும் தொகுதியை விட்டு வேறு தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டால் படிவம் 12 மட்டும் தர வேண்டும் .... நாம் இருக்கும் தொகுதியிலேயே தேர்தல் பணி என்றால் படிவம் 12ஏ பூர்த்தி செய்து நமது வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட வேண்டும்


'இந்தாண்டு நுழைவு தேர்வு நடத்தும் சாத்தியம் இல்லை'


நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர, பொதுநுழைவுத் தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது.

இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 2013ல், பொதுநுழைவுத் தேர்வு நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி இந்திய மருத்துவக்

கவுன்சில் மனு தாக்கல் செய்தது.

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 16ல் துவக்கம்


தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 16ல் துவங்குகிறது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, நேற்று முடிந்தது. தமிழ் அல்லாத பிறமொழி மாணவர்களுக்கு மட்டும், இன்று விருப்ப மொழி பாடத்தேர்வுடன், அனைத்து தேர்வுகளும் முடிகின்றன.

ஏப்., 16 முதல், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பல மாவட்டங்களில், மற்ற வகுப்புகளுக்கு தேர்வுகள் துவங்கி உள்ளதால், விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்க இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, தனியார் பள்ளிகளில் இடங்களை வாடகைக்கு எடுத்து, விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.

Tuesday, April 12, 2016

இன்றுடன் தேர்வுகள் முடிகின்றன !!!


சென்னை மற்றும் புதுச்சேரியில் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கிய 10ம் வகுப்பு தேர்வு இன்றுடன் முடிவடைகிறது.தமிழகம், புதுச்சேரியில் இந்த தேர்வில் மட்டும் 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதி
வருகின்றனர்.சென்னை மாவட்டத்தில் 574 பள்ளிகளை சேர்ந்த 53 ஆயிரத்து 159 மாணவ மாணவியரும், புதுச்சேரியை சேர்ந்த 298 பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரம் மாணவ மாணவியரும் இந்த தேர்வை எழுதி வருகின்றனர்.

HRA TABLE


ஸ்டேட் வங்கியில் 17,140 பணியிடங்கள் தமிழகத்திற்கு 1541 இடங்கள்


ஸ்டேட் வங்கியில் 17 ஆயிரத்து 140 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்திற்கு 1541 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா'. நாடு முழுவதும் ஏராளமான கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கியில் தற்போது 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்பு மீண்டும் கலந்தாய்வு துவங்கியது!


மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, இன்று துவங்குகிறது.

தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில், ஏப்., 4 முதல், 7ம் தேதி வரை நடந்தது.

ஏப்ரல் - புதிய நிதியாண்டில் நீங்கள் செய்ய வேண்டியவை


நிதி­யாண்டின் துவக்கம் நிதி திட்­ட­மி­டலை ஆய்வு செய்து, தேவை­யான மாற்­றங்­களை மேற்­கொள்ள சரி­யான தரு­ண­மாக கரு­தப்­ப­டு­கி­றது. இந்த நிதி­யாண்­டிற்­கான நிதி திட்­ட­மி­டலில் கவ­னிக்க வேண்­டிய விஷ­யங்கள்:
வட்டி விகித குறைப்பு, வட்டி விகித கணக்­கீடு முறையில் மாற்றம் என புதிய நிதி­யாண்டு மாற்­றங்­க­ளுடன் பிறந்­தி­ருக்­கி­றது. இதற்கு முன்னர் சிறு­சே­மிப்­பிற்­கான வட்டி விகிதம் குறைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த மாற்­றங்கள் உங்­களின் சேமிப்பு, முத­லீடு இரண்­டி­லுமே தாக்­கத்தை செலுத்தும் நிலையில் நிதி திட்­ட­மி­டலை ஆய்வு செய்­வ­தற்­கான சரி­யான தரு­ண­மாக இது அமை­கி­றது. வட்டி குறைப்பு கட­னுக்­கான வட்டி விகி­தத்தை குறைக்க வாய்ப்­புள்ள சூழலில் சேமிப்பு மற்றும் டிபாசிட் மீதான வட்­டியும் குறைய வாய்ப்­புள்­ளது. இந்த பின்­ன­ணியில் ஒருவர் தனது நிதி இலக்­கு­க­ளுக்கு ஏற்ப மாற்­றங்கள் செய்­வ­தோடு புதிய இலக்­குகள் இருந்தால் அதற்­கேற்ப திட்­ட­மிட வேண்டும்.

தேர்தலில் ஓட்டுப்போட வேண்டுமா? புதிய வாக்காளராக சேர இன்னும் 4 நாள்தான்...


தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாமை நடத்தி வருகிறது. கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கப்பட்டு இந்த மாதம் 15ம் தேதி வரையிலும் 18 வயதை அடைந்த அனைத்து வாக்காளர்களும் புதிதாக தங்களது வாக்குகளை சேர்த்துகொள்ளலாம்.

25 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் சேர்த்து கொள்ளும் வகையில் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது. இதில் பதியப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் உடனடியாக விசாரணை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும்.உரிய ஆதாரங்கள், குடியிருப்பு சரியாக இருந்தால் வரக்கூடிய சட்டசபை தேர்தலில் வாக்களித்துகொள்ளலாம். எனவே இளம் வாக்காளர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம், முகவரி மாற்றம், உள்ளிட்ட பணிகளுடன், வாக்காளர் அடையாள அட்டை காணாமல் போய் இருந்தாலோ, டேமேஜ் ஆக இருந்தாலோ பணம் கட்டி மாற்றிக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை


Manonmaniam Sundaranar University DD&CE- MAY-2016 - UG/PG/B.Ed/M.Phil Examinations Timetable Announced.

Click Here

மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வு நடத்த ...2013 தீர்ப்பை மறுஆய்வு செய்கிறது சுப்ரீம் கோர்ட்.


நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் சேர, பொது நுழைவுத்தேர்வு நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அளித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் திரும்பப் பெற்றுள்ளது. இதனால், வரும் கல்வியாண்டில், மருத்துவக் கல்லுாரிகளுக்கான நுழைவுத்தேர்வு நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு, பொது நுழைவுத்தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த, 2013 ஜூலையில், பொது நுழைவுத்தேர்வு நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மூன்று நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வில், அப்போதைய தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர், நீதிபதி விக்ரமஜித் சென் ஆகியோர், இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவை ரத்து செய்தனர். அதே நேரத்தில், நீதிபதி தவே, நுழைவுத்தேர்வுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள், அனில் ஆர்.தவே, ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், ஏ.கே.கோயல், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது

Monday, April 11, 2016

தேசிய கீதம், தேசிய கொடிக்கு அவமதிப்பா? நடவடிக்கையில் இறங்க மாநிலங்களுக்கு உத்தரவு


தேசிய கீதத்துக்கும், தேசிய கொடிக்கும் அவமதிப்பு ஏற்படுத்தும் நிகழ்வுகள் குறித்து, ஏராளமான புகார்கள் குவிகின்றன. இதையடுத்து, இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டங்களை அமல்படுத்தும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு வின் நினைவு நாளை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில், தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுசம்பந்தமாக, பல்கலையின் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, நாட்டில், தேசப்பற்று, தேசபக்தி பற்றிய விவாதங்கள் நடந்து வருகின்றன.

தேசிய தரவரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலை... அசத்தல்அரசு பொறியியல் கல்லூரிக்கு 13வது இடம்


மத்திய அரசின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 13வது இடத்தையும், அரசு பொறியியல் கல்லுாரி 49வது இடத்தையும் பிடித்துள்ளதால், இந்தாண்டு விண்ணப்பங்கள் குவியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மனித வள மேம்பாட்டு அமைச்சகம், சிறந்த கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காக 'ரேங்கிங்' திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்காக என்.ஆர்.ஐ.எப்.,தேசிய தரவரிசை மதிப்பீடு அமைப்பு உருவாக்கப்பட்டது.

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த ரேங்கிங் பட்டியலில் இடம் பெறுவதற்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமான கல்வி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் வரை விண்ணப்பங்களை அனுப்பி இருந்தன.

JEE தேர்வில் புதிய முறை அறிமுகம்:பள்ளிக்கல்விக்கு மீண்டும் முக்கியத்துவம்.


அடுத்த கல்வியாண்டு முதல், பிளஸ் 2வில், 75 சதவீத மதிப்பெண் பெறுவோர் மட்டுமே, ஐ.ஐ.டி.,க்களில் சேர்வதற்கான, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான ஜே.இ.இ., தேர்வை எழுத முடியும்.தேசிய கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்நுழைவுத்தேர்வில், 25 ஆயிரத்துக்குள், 'ரேங்க்' எடுக்கவேண்டும்நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணுடன், பிளஸ் 2 மதிப்பெண்ணை,40 சதவீதத்திற்கு கணக்கிட்டு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக மாற்றி சேர்ப்பார்கள்.

இதன் பிறகே, கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.இந்த தேர்வுக்காக, நாடு முழுவதும் மாணவர்கள் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கின்றனர். அதனால், ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி மையத்திற்கு, குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்துகின்றனர். இந்த அடிப்படையில், நாடு முழுவதும், 24 ஆயிரம் கோடி ரூபாய் பயிற்சி மையங்களுக்கு கட்டணமாக வசூலாகிறது.அத்துடன், மாணவர்கள், பிளஸ் 2 படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல்,பயிற்சிக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். எனவே, ஐ.ஐ.டி., மாணவர்களில் பலர், ஆராய்ச்சிகளில் ஈடுபடாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.எனவே, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு முறையை மாற்ற, ரூர்கி ஐ.ஐ.டி., பேராசிரியர் அசோக் மிஸ்ரா தலைமையிலான ஆய்வு கமிட்டியை மத்திய அரசு அமைத்தது. இந்த கமிட்டியினர், 2015 நவம்பர், 5ல் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.இந்த அறிக்கையின் கீழ், பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்ட பின் புதிய முடிவை, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.மத்திய அரசு அறிவித்துள்ள புதிய முறை:இனி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் குறைந்த பட்சம், 75 சதவீதமதிப்பெண் அல்லது அதிகபட்ச முதல் மதிப்பெண்ணில் இருந்து, 20 சதவீதத்திற்குள் மதிப்பெண் பெற்றால் மட்டுமே ஜே.இ.இ., நுழைவுத்தேர்வை எழுத முடியும். ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில், 25 ஆயிரத்துக்குள், 'ரேங்க்'பெற வேண்டும் பிளஸ் 2 மதிப்பெண்ணில், 40 சதவீதம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக சேர்க்கப்படாது; இந்த முறை கைவிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடுகளை சரிசெய்யக் கோரி தொடர் தர்ணா: ஆசிரியர்களுடன் மந்திரி நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி 13-ந்தேதி முடிவை அறிவிப்பதாக மந்திரி பேட்டி


சம்பள முரண்பாடுகளை சரிசெய்யக் கோரி தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுடன் மந்திரி நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது. இதுதொடர்பாக 13-ந் தேதி முடிவை அறிவிப்பதாக மந்திரி கூறியுள்ளார்.

தொடர் தர்ணா

சம்பள முரண்பாடுகளை சரிசெய்யக் கோரி கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெங்களூருவில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்-மந்திரி சித்தராமையா ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து கடந்த சில நாட்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடத்தினார். தர்ணா போராட்டத்தை கைவிட்டு மாணவர்களின் நலன் கருதி விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று சித்தராமையா வேண்டுகோள் விடுத்தார்.

வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன கலெக்டர் ஆய்வு


வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணியினை கலெக்டர் நந்தகோபால் நேரில் ஆய்வு செய்தார்.

சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (மே) 16–ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான படிவங்கள், வாக்குப் பெட்டியை சுற்றிலும் வைக்கப்படும் அட்டைகள், கோந்து, வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்படும் ஊக்கு உள்பட அனைத்து பொருட்களையும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தது. தேர்தல் ஆணையத்தால் வேலூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த அனைத்து பொருட்களும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் வைக்கப்பட்டு இருந்தது.

Saturday, April 9, 2016

இணையதளத்தில் அரசாணைகள் வெளியிட வழக்கு .


தமிழக அரசு அரசாணை, அறிவிப்புகளை இணையதளத்தில் வெளியிட தாக்கலான வழக்கில், 'அரசாணைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அனைத்துத் துறைகளுக்கும் 2014ல் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை முறையாக அமல்படுத்தினாலே போதுமானது,' எனக்கூறி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பைசல் செய்தது.மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழக அரசு அரசாணை, அறிவிப்புகள், விதிகள், சுற்றறிக்கைகளை வெளியிடாமல் ரகசியம் காக்கிறது. இதனால், அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ள முடிவதில்லை. அரசாணைகள் பற்றி தகவல் உரிமைச் சட்டத்தில் விபரம் கோரினால், முழுமையான பதில் இல்லை.மத்திய அரசு அரசாணைகளை, அதன் இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிடுகிறது. அரசாணைகள், அறிவிப்புகளை இணையதளத்தில் வெளியிட்டால்தான், மக்கள் பயனடைய முடியும். இதை வலியுறுத்தி தமிழக தலைமைச் செயலருக்கு மனு அனுப்பினேன். அரசாணை, அறிவிப்புகள், சுற்றறிக்கை, விதிகளை உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ரமேஷ் மனு செய்திருந்தார்.

DA from January 2016 is 125% for Central Government Employees – Orders issued by Govt


DA from January 2016 is 125% – Orders issued by Govt for payment of Dearness Allowance of 125% from January 2016 – Increased by 6%
DA from January 2016 for Central Government Employees has been increased from 119% to 125%.  Finance Ministry has issued orders today to this effect.  Earlier Union Cabinet had given its approval for hiking Dearness Allowance of Central Government Employees and Pensioners with effect from 1st January 2016.  While dearness allowance for April 2016 would be paid at revised rate along with pay and other allowances for the month of April 2016, arrears of DA for the period from 1st January 2016 to March 2016 would be paid in cash all Central government Employees.  In respect of all Central Government Pensioners separate orders will be issued by Department of Pension and Pensioners’s welfare.

பள்ளி பஸ் விதிமுறைகள் அமலாவதில் என்ன பிரச்னை?


பள்ளி பஸ்களுக்காக கொண்டு வரப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள பிரச்னைகள், அதற்கான தீர்வு என்ன என்பதை, பள்ளிகள் தெரிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள சியோன் பள்ளி பஸ்சில் உள்ள ஓட்டை வழியாக, சிறுமி கீழே விழுந்து பலியான சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது; 2012 ஜூலையில் சம்பவம் நடந்தது.

இந்த சம்பவம் தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், பள்ளி பஸ்களுக்கான புதிய விதிமுறைகளை கொண்டு வரும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, புதிய விதிமுறைகளை தமிழக அரசு கொண்டு வந்தது.

பள்ளி ஆசிரியர்களுக்கு சிங்கப்பூரில் பயிற்சி: கல்வித் தரத்தை உயர்த்த டெல்லி அரசு அதிரடி


அரசுப் பள்ளிகளில் ஆசியர்களாக பணியாற்றுபவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி சிறப்பு பயிற்சி அளிக்க ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு தீர்மானித்துள்ளது.

இந்தியாவிலும் வெளிநாடுகளுக்கு நிகரான கல்வித்தரத்தை கொண்டுவர வேண்டும் என இங்குள்ள பல மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன. இதில் ஒருகட்டமாக, டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி அங்குள்ள பிரபல ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் சிறப்பு பயிற்சி அளிக்க ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது.

மகப்பேறு விடுப்பு 180 நாட்களாக உயர்த்தப்பட்ட அரசாணை !


Central Government -6% DA Hike(119% to 125%)order effect from 01/01/2016 .Date 07/04/2016


வாட்ஸ்அப்பில் இனி தகவல்களை திருட முடியாது:

புதிய வசதி அறிமுகம்.
வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் தகவல்கள், வீடியோ, புகைப் படத்தை இனிமேல் யாரும் திருடவோ, இடைமறித்துக் பார்க்கவோ முடியாத வகையில் மறையாக்கம் (என்க்ரிப்ஷன்) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் வாட்ஸ் அப் குழு எண்ணிக்கை வரம்பு 100-ல் இருந்து 256 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பயனாளர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்கும் வகையில் முதல்முறையாக மறை யாக்கம் எனப்படும் என்க்ரிப்ஷன் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒருவருக்கு அனுப்பப்படும் தகவல்கள், வீடியோ, புகைப்படம் என எதுவாக இருந்தாலும் யாரும் திருடவோ, இடைமறித்துப் பார்க் கவோ முடியாது. புதிய வெர்ஷன் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத் துவோர் இனிமேல் கவலையின்றி தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும். வாட்ஸ் அப்பில் மறையாக் கம் வசதி அறிமுகம் செய்யப்பட்டி ருப்பது அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட உலக நாடு களை கவலையடையச் செய்துள் ளது. இது தீவிரவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று உலக நாடுகள் தெரிவித்துள்ளன. ஆனால் வாட்ஸ்அப் நிர்வாகம் கூறியபோது மறையாக்கம் வசதி யால் தீவிரவாதிகளால் இனிமேல் தகவல்களை திருட முடியாது என்று தெரிவித்துள்ளது

Friday, April 8, 2016

பிளஸ்-2 கணித தேர்வில் தவறான வினாவுக்கு 6 கருணை மதிப்பெண்: அரசு தேர்வுத்துறை உத்தரவு.

பிளஸ்-2 கணிதத் தேர்வில் தமிழ்வழி வினாத்தாளில் தவறாக கேட்கப்பட்டிருந்த வினாவுக்கு விடையளிக்க முயற்சி செய்திருந்தாலே 6 கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) வழங்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடி வடைந்தன. விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 14-ம் தேதி தொடங் கியது. தமிழகம் முழுவதும் 64 மையங்களில் பிளஸ்-2 விடைத் தாள்கள் திருத்தப்பட்டு வருகின் றன. பொதுத்தேர்வில் தவறாக கேட்கப்படும் வினாக்களுக்கு கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு பிளஸ்-2 வேதியியல் தேர்வில் பாடத்திட்டத்தை விட்டு வெளியே கேட்கப்பட்டிருந்த இரு வினாக் களுக்கு 6 கருணை மதிப்பெண் அளிக்க அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இருக்காது: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு.


கிராமப்புற மாணவர்கள் பாதிக் கப்படுவார்கள் என்பதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண் ணப்பிக்கும் முறை கொண்டுவரப் படாது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.மாணவர்கள் வரவேற்புதமிழகத்தில் பொறியியல், மருத்துவம், கால்நடை மருத் துவத்துக்கான விண்ணப்பங் களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கும் முறை இருந்து வந்தது

. சோதனை முயற்சியாகபொறியியல் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கும் முறையுடன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையும் கொண்டுவரப்பட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து கடந்த ஆண்டு கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும்முறை அமல்படுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. ஏப்ரல் 15-ம் தேதி முதல் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இவைதவிர விவசாயம், தோட்டக்கலை, வனவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப் பிக்கும் முறை அமலில் இருக்கிறது. ஆனால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பு களுக்கு மட்டும் இன்னும் விண்ணப்பங்களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கும்N முறையேஅமலில் இருக்கிறது. சோதனை முயற்சியாகக்கூட ஆன்லைன் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் முறைகொண்டுவரப்படவில்லை.

NET NOTIFICATION !!!


மத்திய பல்கலை நுழைவுத்தேர்வு ஏப்., 15 வரை விண்ணப்பிக்கலாம்.


மத்திய பல்கலைகளில் சேர்வதற்கான, நுழைவுத் தேர்வுக்கு, ஏப்., 15ம் தேதியுடன்,'ஆன்லைன்' பதிவு முடிகிறது.தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஜம்மு - காஷ்மீர்உட்பட, ஒன்பது மாநிலங்களில், மத்திய மனிதவள அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் மத்திய பல்கலைகள் செயல்படுகின்றன.

7-வது சம்பள கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்தினால் பணவீக்கம் 1

சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும்; ரிசர்வ் வங்கி
7-வது சம்பள கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்தினால் பணவீக்கம் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.இதன் காரணமாக நிகர உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 0.40 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும்கூறியுள்ளது. அதே நேரத்தில் சில்லரை பணவீக்க விகிதம் 5 சதவீதத்துக்குள் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.2016-17 நிதியாண்டின் இரண் டாவது காலாண்டில் 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

தேர்தலுக்கு பின் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'ஆதார்' அட்டை நகல் வாங்க முடிவு


சட்டசபை தேர்தல் முடிந்ததும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கு வதற்காக மக்களிடம் இருந்து 'ஆதார்' அட்டை நகலை வாங்க உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது. அவற்றில் உள்தாள் ஒட்டப்பட்டு செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல முறைகேடுகள் நடக்கின்றன. இதை தடுக்க கண், விரல் ரேகை மற்றும் புகைப்படத்துடன் கூடிய 'ஸ்மார்ட்' வடிவில் ரேஷன் கார்டு வழங்க உணவு துறை முடிவு செய்தது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு துவங்கின. ஆனால் அரசியல் குறுக்கீடு காரணமாக செயல்படுத்த முடிய வில்லை.

TET Candidates (+2 +D.T.Ed +B.Lit) : D.T.Ed + B.Lit முடிந்தவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் இரண்டாம் தாள் தேர்ச்சி பெற்றிருந்தால் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்திற்கான முழு தகுதி உண்டு என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதிலளித்துள்ளது..









Thursday, April 7, 2016

சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு ஒரே நாளில் இரு தேர்வு!


ஓசூர் கல்வி மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு, ஒரே நாளில், இரு தேர்வுகள் நடந்ததால், மாணவ, மாணவியர் கடும் அவதியடைந்தனர். இதனால், பெற்றோர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த, 2006ம் ஆண்டு ஜூன் மாதம், 12ம் தேதி அமல்படுத்தப்பட்ட தமிழ் கட்டாயமாக்கும் சட்டத்தால், 2006ம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு சேர்ந்த, தெலுங்கு, கன்னட, உருது மொழி மாணவ, மாணவியர், தமிழ் கட்டாயம் படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

குளூக்கோஸ் பாக்கெட், குடிநீர் பாட்டில் ஓட்டுக்கு இலவசம்! தேர்தலன்று ஓட்டுச்சாவடிகளில் வினியோகம்


ஓட்டுப்பதிவன்று வெயிலில்வரிசையில் காத்து நிற்கும்வாக்காளர்கள், சுருண்டு விழாமல் இருக்க, குடிநீர் மற்றும் குளூக்கோஸ் பாக்கெட்டுகளை இலவசமாக வினியோகம் செய்ய, கோவை மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நுாறு சதவீத ஓட்டுப்பதிவு எனும் இலக்கை எட்ட, நிர்வாகம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.

கோவை மாவட்டத்திலுள்ள, பத்து சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட, பகுதிகளில், 2,911 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில், மே 16 ம் தேதி, காலை 7:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, உணவு இடைவேளை இல்லாமல், ஓட்டுப்பதிவு நடைபெறும்.

உதவித்தொகைக்கு உதவும் வலைத்தளங்கள்.


கல்வி செலவை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வடிகாலாக மாணவர்களுக்கு இருப்பது உபகார சம்பளம் எனப்படும் கல்வி உதவித்தொகை. ஆனால் இன்றைய பொருளாதார தேக்கநிலை சூழலில் இந்த உதவி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. எனவே அதற்கான ஒரு மாற்று ஏற்பாடு, கல்வி செலவை சமாளிக்க திணறும் மாணவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும். ஆகவே கல்வி உதவித்தொகைகள் பற்றிய பல தகவல்களைக் கொண்டிருக்கும் சில இணையதளங்களின் முகவரிகளை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

இத்தளங்களை ஆராய்வதன் மூலம் கல்வி உதவித்தொகை சம்பந்தமான பல அரிய, உபயோகமான தகவல்களைப் பெறலாம்.

TNPSC BULLETIN (EXTRAORDINARY) SECOND CLASS LANGUAGE TEST (FULL TEST) PART ‘A’ WRITTEN EXAMINATION AND VIVA VOCE PARTS ‘B’ ‘C’ AND ‘D’(TEST CODE NO.001)


List of passed candidates avail in www.tnpsc.gov.in

TNPSC- Results of Departmental Examinations December -2015 all tests Published updated as on 06.04.2015

மத்திய பல்கலைகளில் சேர்வதற்கான, நுழைவுத் தேர்வுக்கு, ஏப்., 15ம் தேதியுடன்,'ஆன்லைன்' பதிவு முடிகிறது.


தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஜம்மு - காஷ்மீர் உட்பட, ஒன்பது மாநிலங்களில், மத்திய மனிதவள அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் மத்திய பல்கலைகள் செயல்படுகின்றன. இந்த பல்கலைகளில், 3,000 இடங்களில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கப்படுகின்றனர். குறைந்த கட்டணத்தில், விடுதி வசதி கொண்ட இந்த படிப்புகளில் சேர, பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு மே, 21, 22ல் நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மார்ச், 14ல் துவங்கியது. ஏப்., 15 வரை பதிவு செய்யலாம். தேர்வு முடிவுகள், ஜூன், 17ல் வெளியிடப்படும். இதுகுறித்த விவரங்களை, http:/cucet16.co.in/WebPage/Home.aspx என்ற இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.

Wednesday, April 6, 2016

கம்ப்யூட்டர் மூலமாக வருமான வரி கணக்கு தாக்கல் தொடங்கியது


ஜூலை 31-ந்தேதி வரைவருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்
2016-17 வரிவிதிப்பு ஆண்டுக்கான வருமான வரி கணக்கை குறிப்பிட்ட நிறுவனங்கள், தனிநபர்கள் கம்ப்யூட்டர் மூலமாக தாக்கல் செய்வது நேற்று தொடங்கியது

கம்ப்யூட்டரில் மத்திய வருமான வரி துறையின் இணையதளத்தில் ஐ.டி.ஆர்.1 (சஹாஜ்) என்ற படிவத்தை பயன்படுத்தி மாதச்சம்பளம் பெறும் தனிநபர்கள், வட்டி வருமானம் பெறுகிறவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்.

வாக்குப் பதிவு தினத்தன்று சம்பளத்துடன் விடுமுறை.


சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நாளான மே 16-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது.1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 135பி பிரிவின் அடிப்படையில், தொழில் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் (தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட), உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி-சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளத்துடன்கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது.

நெட் தேர்வு ஏப்ரல் 12 முதல் விண்ணப்பிக்கலாம்


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் நடத்தப்படும் நெட் தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஜூலை மாதம் 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளை பிழிந்தெடுக்கும் வசூல் வேட்டை


கடந்த, ஐந்து ஆண்டுகளாக தனியார் பள்ளிகள் கணக்கிலடங்காத பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. முதலில் மூன்று ஆண்டுகள் அளித்த அங்கீகாரத்தை, ஓராண்டுக்கு ஒருமுறை என மாற்றி விட்டனர். அதிலும், மாணவர் சேர்க்கை முடித்து, அந்த கல்வி ஆண்டே முடிந்த பின்தான், முடிந்த ஆண்டிற்கானஅங்கீகாரம் கிடைக்கிறது. அதற்கும் பெயரளவில் பல காரணங்களை சொல்லி, அதிகாரிகள் வசூல் செய்கின்றனர்.

நிலப்பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு, அங்கீகாரம் தருவோம் என்று கூறி, அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில்பேசி, தனியார் பள்ளிகளிடம் வசூல் செய்தனர்.

ஆசிரியர் பொன்மொழிகள் - ஆசிரியர் என்பதில் பெருமை கொள்வோம்.


1. நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக்
கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்
பட்டிருக்கிறேன். - மாவீரன் அலெக்ஸாண்டர்

2. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்;
போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆகார். - கதே

வண்ணங்களின் தமிழ்ப் பெயர்


வண்ணங்களின் தமிழ்ப் பெயர்

தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால், இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ்வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது.

ஏப்.15-க்கு மேல் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி


எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத் தும் பணியை ஏப்ரல் 15-ம் தேதிக்கு மேல் தொடங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்து உள்ளது.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 15-ம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 10 லட் சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவி கள் தேர்வில் கலந்து கொண்டுள் ளனர். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அறிவியல் தேர்வு நாளை (வியாழக்கிழமை) நடை பெறுகிறது. 11-ம் தேதி நடைபெறும் சமூக அறிவியல் தேர்வுடன் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் முடிவடையும்.

குரூப்- 2 ஏ பணிக்கு 4-வது கட்ட கலந்தாய்வு: ஏப்.12, 13-ம் தேதிகளில் நடக்கிறது


நேர்காணல் அல்லாத உதவியாளர், நேர்முக எழுத்தர் உள்ளிட்ட பணிகளில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 29.6.2014 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

மத்திய அரசில் மகப்பேறு விடுப்பையும்,குழந்தை பராமரிப்பு விடுப்பை சேர்த்து துய்க்கலாமா?


Proposals on Child Care Leave (CCL) and Maternity Leave – Dopt OM on 1.4.2016

No. 13018/1/2014-Estt(L)
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Personnel & Training

Old JNU Campus, New Delhi 110 067
Dated: 01.04.2016

OFFICE MEMORANDUM

Subject-Proposals on Child Care Leave (CCL) and Maternity Leave – Reg.

This is regarding proposals on the subject of Maternity Leave and CCL that are under consideration in this Department. In this connection, a workshop was held in DoPT on 28.01.2016 with the stakeholder Departments on the following issues and the consensus emerged as follows:
(a) Maternity/CCL in case of surrogacy: There is no provision at present for any kind of Leave for surrogate/commissioning mothers. It is proposed that 180 days maternity leave may be granted to the surrogate as well as commissioning mothers, in case either/both of them are Government servants. The commissioning mother also requires time for bonding with her child and to take care of him/her and hence would also become eligible for Child Care Leave. Paternity Leave may also be granted in case of surrogacy.

Tuesday, April 5, 2016

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19 உயர்வு டீசல் விலையும் ஒரு ரூபாய் உயர்ந்தது


சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19–ம், டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாயும் உயர்ந்தது.
பெட்ரோல் விலை உயர்வு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை மாதம் இருமுறை மாற்றி அமைத்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன.
இதன்படி நேற்று டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19–ம், டீசல் விலை லிட்டருக்கு 98 பைசாவும் உயர்த்தப்பட்டது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19 உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.61.32 ஆனது. டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரித்து லிட்டர் ரூ.50.49 ஆனது.

பத்தாம் வகுப்பு 10 மதிப்பெண் வினாவில் குழப்பம்


பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் 10 மதிப்பெண் பகுதியில் 'சமன்பாட்டை தீர்க்க' வினா தவறாக கேட்கப்பட்டதால், அக்கேள்விக்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள்
வலியுறுத்துகின்றனர்.மாணவர்கள், ஆசிரியர் கூறியதாவது: கே.கே.விஷால், கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை: கேள்விகள் எளிதாக சிந்தித்து எழுதும் வகையில் இருந்தது. ஐந்து மதிப்பெண் வினாவில் 'பிராபபிளிட்டி', இரண்டு மதிப்பெண் வினாவில் 'மாட்ரிக்ஸ்' கேள்விகள் சிந்தித்து எழுதுவதாக அமைந்தது. மற்ற கேள்விகள் எளிமையாக இருந்தது.

புதிய படிப்புகள் ஏராளம் வேலை வாய்ப்பும் தாராளம் கல்லூரி இயக்குனர் மாறன் பேச்சு


''மாணவர்கள் வழக்கமான படிப்புகளை தேர்வு செய்வதை விட புதிய படிப்புகளை தேர்வு செய்தால் உடன் வேலைவாய்ப்பு கிடைக்கும்,'' என, சென்னை சாய்ராம் பொறியியல் கல்லுாரி இயக்குனர் மாறன் தெரிவித்தார்.
மதுரையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் 'புதிய படிப்புகள்' தொடர்பாக அவர் பேசியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் துறைகளில் வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய படிப்புகள் அறிமுகமாகின்றன. சாப்ட்வேர் இன்ஜி., துறையில் ஒவ்வொரு ஆண்டும் 35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. பொறியியலில் மெக்கட்ரானிக்ஸ் படிப்பை தேர்வு செய்யலாம். கலை பிரிவில் சுற்றுலா தொடர்பான படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இதுதவிர மைனிங் இன்ஜி., மரைன் இன்ஜி., எலக்ட்ரிக்கல் மரைன் இன்ஜி., கம்யூனிகேஷன் மரைன் இன்ஜி., போன்ற தனித் திறன் படிப்புகளை தேர்வு செய்யலாம்.

ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கலாம்; இந்தியாவிலேயே முதல்முறையாக ஆதார் ஏ.டி.எம். அறிமுகம்


இந்தியாவிலேயே முதல்முறையாக ஆதார் ஏ.டி.எம். அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி மூலம் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே பணத்தை எடுக்க முடியும்.

மகாராஷ்டிராவை சேர்ந்த டி.சி.பி. வங்கி அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த புதிய வசதியின் மூலம் பணம் எடுக்க ஆதார் அட்டையில் உள்ள 12 எண்களை ஏ.டி.எம். இயந்திரத்தில் டைப் செய்தால் போதும். பிறகு, நமது கைரேகையை அதில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கேனரில் பதிவு செய்தால் பணப் பரிமாற்றம் செய்ய நமக்கு அனுமதி அளிக்கும்.

ஜூன் 1ல் புத்தக கண்காட்சி துவக்கம்


'சென்னை தீவுத்திடலில், வரும் ஜூன், 1ம் தேதியில் இருந்து, 13ம் தேதி வரை, 39வது புத்தக கண்காட்சி நடக்க உள்ளது' என, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) தலைவர் காந்தி கண்ணதாசன், செயலர் கே.எஸ்.புகழேந்தி, பொருளாளர் ஜி.ஒளிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: கடந்த, 2015 டிசம்பரில் பெய்த கனமழையால், தமிழ் புத்தக விற்பனையாளர்களும், பதிப்பாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதனால், ஜனவரியில் புத்தக கண்காட்சியை நடத்த முடியவில்லை.

மனப்பாடம் கூடாது; பகுத்தறிந்து படிக்க வேண்டும்


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பொதுத் தேர்வைத் தவிர உயர்கல்விக்கான நுாற்றுக்கணக்கான நுழைவுத் தேர்வுகளை கட்டாயம் எழுத வேண்டும், என, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

சென்னையில் நடந்து வரும், தினமலர் நாளிதழின் வழிகாட்டி நிகழ்ச்சியில் நேற்று, பிரபல கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மட்டுமே, பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்ணை மட்டும் நம்பி உள்ளனர். ஆனால், மற்ற மாநில மாணவர்கள், நுாற்றுக்கணக்கான படிப்புகளை தேர்வு செய்து, அதற்கான நுழைவுத் தேர்வு மதிப்பெண் மூலம் எளிதாக, உயர்கல்வி வாய்ப்பை பெறுகின்றனர்.

Monday, April 4, 2016

ஓட்டுப்பதிவு நேரம் அறிவிப்பு


தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில், ஏப்., 4ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
ஐந்து மாநிலங்களிலும் ஓட்டுப்பதிவு காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஓட்டுப்பதிவு நாளில் வாக்காளர்களிடம் எடுக்கப்படும் கருத்து கணிப்பு முடிவுகள், பத்திரிகை, 'டிவி' என எதிலும், ஏப்.,4ம் தேதியில் இருந்து மே 16ம் தேதி மாலை 6:30 மணி வரை வெளியிடக்கூடாது.தேர்தல் கருத்து கணிப்பு எதுவாக இருந்தாலும் ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன் வரை வெளியிடலாம். அதன்பின் வெளியிடக்கூடாது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

ஆதார் பதிவு 100 கோடியை தொடுகிறது


ஆதார் அடையாள அட்டை பட்டி யலில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை இன்னும் சில நாட் களில் 100 கோடியை கடக்க உள்ளது.

ஆதார் திட்டத்தை செயல்படுத்தி வரும் இந்திய தனித்துவ அடை யாள எண் ஆணைய (யூஐடிஏஐ) இணையதளத்தில் இதுவரை 99.91 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாக கூறப் பட்டுள்ளது. இந்நிலையில் இது 100 கோடியை எட்டுவதை அறிவிப் பதற்காக மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாளை செய்தியாளர்களை சந்திப்பார் என கூறப்படுகிறது.

விஐடி பல்கலைக்கழகத்தில் படிக்க 2.12 லட்சம் பேர் விண்ணப்பம்:


ஏப்ரல் 6 முதல் 17 வரை நுழைவுத் தேர்வு நடக்கும் என அறிவிப்பு.
விஐடி பல்கலைக்கழகத்தில் கல்வி பயில நடத்தப்படும் நுழைவுத் தேர்வை (VITEEE) எழுத 2.12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது ஒரு சாதனை அளவாகும் என்று அந்த பல்கலை. தெரிவித்துள்ளது.விஐடி பல்கலைக்கழகத்தில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நுழைவுத் தேர்வுக்காக 2,02,406 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு இது மேலும் அதிகரித்துள்ளது. தற்போது 2,12,238 பேர் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.இது தொடர்பாக விஐடி பல்கலை. நிறுவனர் மற்றும் வேந்தர் ஜி.விசுவநாதன் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியதாவது:இங்கு படித்த மாணவர்களுக்கு இந்த ஆண்டில் அதிக வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

இன்று மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 4 ) பிறந்த நாள்



மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855ம் ஆண்டு சுந்தரம் பிள்ளை பிறந்தார். இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1876 ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.

ஆசிரியப் பணி

1877 இல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார், பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். 1880 இல் எம்.ஏ. பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வி துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.

கல்விக்குழு என்ற பெயரில் தனியார் பள்ளிகளிடம் வசூல்:புத்தகங்கள் விற்பனையில் அதிகாரிகள் அடாவடி


கல்விக்குழு அமைப்பதாக கூறி தனியார் பள்ளிகளுக்கான 5 சதவீத பாடப் புத்தக தள்ளுபடியை வழங்காமல் கூடுதலாக ஆயிரக்கணக்கில் கல்வித்துறை அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

தனியார் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தமிழ் பாடப் புத்தகம் வாங்கும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, தமிழ்நாடு பாடநுால் மற்றும்கல்வியியல் பணிகள் கழகத்தில், 5 சதவீத விலை சலுகை உண்டு. தனியார் பள்ளிகள் பாடப்புத்தகங்களுக்கான கட்டணத்தில் தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் 95 சதவீதம் அளித்தால் மட்டும் போதும். ஆனால் ஒவ்வொரு மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள் இணைந்து, தனியார் பள்ளிகளின் புத்தக கொள்முதலை தங்கள் வசம் எடுத்துள்ளன.

ஏடிஎம்களில் இரவு 8 மணிக்குப் பிறகு பணம் நிரப்பக் கூடாது


மத்திய அரசு பரிந்துரை.
இரவு 8 மணிக்கு மேல் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பக் கூடாது என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.ஏடிஎம் இயந்திரங்களில் பணம் போட செல்லும் வாகனங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்கும் வகையில், ஏடிஎம் இயந்திரங்களில் பணம் போடும் பணியை இரவு 8 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளின் தானியங்கி பணம்வழங்கும் இயந்திரங்களில் (ஏடிஎம்) அன்றாடம் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிரப்பப்படுகிறது.

Saturday, April 2, 2016

TAMILNADU OPEN UNIVERSITY B.ED., 2016- II COUNSELLING LIST


TAMILNADU OPEN UNIVERSITY

B.ED., 2016- II COUNSELLING LIST (Tamil Medium)

B.Ed., 2016 -II - CUT OFF MARK DETAILS  DATE-11.04.16
(TAMIL & ENGLISH MEDIUM)

B.ED. -2016- COUNSELLING FORMS

AVAIL IN www.tnou.ac.in

பியூசி தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்: 22 பேரிடம் சிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை


2-ஆம் ஆண்டு பியூசி தேர்வில் வேதியியல் பாட வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து பியூ கல்வித் துறை அதிகாரிகள் 2 பேர் உள்பட 22 பேரிடம் சிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.2-ஆம் ஆண்டு பியூசி பொதுத் தேர்வு கடந்த மார்ச் 12-ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 21-ஆம் தேதி நடைபெற்ற வேதியியல் பாட தேர்வு வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து,அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மார்ச் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், மார்ச் 31-ஆம் தேதி தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியானதால் அந்தத் தேர்வும் ரத்து செய்யப்பட்டு, ஏப்.12-ஆம் தேதிக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.இந்த விவகாரம் கர்நாடக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்று கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள பியூ கல்வித் துறை அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமையும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனிடையே, இந்த விவகாரம் குறித்து சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக சிஐடியின் டிஐஜி சோனியா நாரங்க் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் காவல் கண்காணிப்பாளர் மார்ட்டீன் உள்ளிட்டோர்இடம் பெற்றுள்ளனர்.

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகித குறைப்பு இன்று முதல் அமல்


சிறு சேமிப்புகளுக்கான வட்டி விதிகம் குறைக்கப்படும் என கடந்த 16-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பி.எப்., கிஸான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகித குறைப்பு இன்று(ஏப்.,1) முதல் அமலுக்கு வருகிறது.

மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் எப்போது?


இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஏப்., 15ல் துவங்குகிறது.

அதே நேரத்தில், மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்ப வினியோகம் எப்போது துவங்கும் என, மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர். பிளஸ் 2 தேர்வுகள், இன்றுடன் முடிகின்றன. ஏப்ரல் மாத இறுதியில், தேர்வு முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜி., படிப்பு களுக்கான விண்ணப்ப வினியோகம், ஏப்., 15ல் துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

IGNOU- Revaluation Dec 2015 Results Published


IGNOU- Revaluation Dec 2015 Results Published

IGNOU- Revaluation Dec 2015 Results click here ...

இந்தியர்களின் மூளை உலகளவில் சிறந்தது என்பதற்கான ஆதாரம்! இந்தியா மற்றும் இந்தியர்களை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பல விசயங்கள்..!!!


இந்தியர்களின் மூளை உலகளவில் சிறந்தது என்பதற்கான ஆதாரம்!
இந்தியா மற்றும் இந்தியர்களை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பல விசயங்கள்..!!!

1. அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் 33% பேர் இந்தியர்கள்.

2. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் 12% பேர் இந்தியர்கள்.

3. உலகில் உள்ள ஐ.பி.எம் (IBM) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 23% பேர் இந்தியர்கள்.

4. அமெரிக்க விண்வெளித்துறை நாசா"வில் (NASA) பணிபுரிபவர்களில் 36% பேர் இந்தியர்கள்.

5. உலகில் உள்ள இன்டெல் (INTEL) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 17% பேர் இந்தியர்கள்.

Friday, April 1, 2016

ஏப்ரல் முட்டாள்கள் நாள் - வரலாறு



ஏப்ரல் முட்டாள்கள் நாள் ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் உத்தியோகப்பற்றற்ற முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

வரலாறு

இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.

இன்ஜினியரிங் விண்ணப்பத்துக்கு டி.டி., தேவையா? அண்ணா பல்கலை திட்டத்தை மாற்ற கோரிக்கை.


இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்துக்கு, டி.டி., எடுக்க வேண்டும் என்பதால், மாணவர்களின் பணம், 1.5 கோடி ரூபாய் வீணாகும் என, பெற்றோர் தெரிவித்துள்ளனர். எனவே, நேரடியாக வங்கியில் கட்டண தொகையை செலுத்தும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.'அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புகளுக்கு, 'ஆன்லைனில்' மட்டுமேவிண்ணப்பம் வழங்கப்படும்' என, அண்ணா பல்கலை அறிவித்துஉள்ளது.

கல்வி கட்டண கமிட்டிக்கு அதிகாரி நியமனம்.


கல்விக்கட்டண நிர்ணய கமிட்டியின் சிறப்பு அதிகாரியாக,மெட்ரிக் இணை இயக்குனர் ஸ்ரீதேவிநியமிக்கப்பட்டு உள்ளார்.கடந்த, 2009ல், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் வந்ததும், சுயநிதி தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. 2012 ஜனவரியில், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு, இந்த கமிட்டி தலைவரானார்.

150 கோடி ரூபாய் பாக்கி - வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை ?


தமிழக அரசு, 150 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதால் வரும் கல்வியாண்டில், கட்டாய கல்விச் சட்டத்தின்படி, இலவச மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது' என, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன. மத்திய அரசு, 2009ல், கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. இதே சட்டத்தை, மாநில அரசுகளும் கொண்டு வந்தன. அதன்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆறு வயது முதல், 14 வயது வரையிலான குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கும் கட்டண செலவை மத்திய அரசே ஏற்கிறது.

பள்ளி கல்வித்துறை - 6, முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை !


வாட்ஸ்அப்-இல் அறிமுகமாகி இருக்கும் புதிய வசதிகள்!


தினம்தோறும் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலி, அண்மையில் தனது கோடிக்கணக்கான பயனர்களின் நன்மையை கருத்தில் கொண்டு வாட்ஸ்அப் மூலம்டாகுமென்ட் பைல்-களை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது.


நீங்கள் உங்களது ஸ்மார்ட் போனில் வாட்ஸ்அப்-இன் புதிய பதிப்பை பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்களும் உங்களது போனில் இருந்து வாட்ஸ்அப் மூலம் உங்களது நண்பர்களுடன் டாகுமென்ட் பைல்-களை பகிர்ந்து கொள்ள முடியும்.

தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 200 எளிய ஆங்கில வார்த்தைச் சொற்கள் !!!

ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதியில் தேர்தல் பயிற்சி வகுப்பு தொடக்கம்


தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள் நாளை நிறைவு பெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.

மொழி பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வரும் நிலையில் முக்கிய பாடங்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. இதனை போன்று பத்தாம் வகுப்புக்கு மார்ச் 29ம் தேதி மொழி பாடத்தேர்வுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஏப்ரல் 11ம் தேதியுடன் அனைத்து தேர்வுகளும் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற உள்ளது. இந்தநிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகளும் நிறைவு பெற்றுவிடும் நிலையில் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.