Pages

Thursday, April 14, 2016

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 15 வயதுள்ள பெண் குழந்தைகளும் சேரலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு


செல்வமகள் சேமிப்பு கணக்கில் பிறந்த குழந்தைமுதல் 14வயதான சிறுமிகள் வரைஇணையலாம் என்ற நிலை இருந்தது. இனி 15 வயது வரை இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம் என்றுஅஞ்சல் துறை

அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்தியபத்திரிகை தகவல்அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''பெண் குழந்தைகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக செல்வமகள் சேமிப்புத்திட்டம் என்னும் திட்டம் கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்ததிட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் 12லட்சத்து 38 ஆயிரம் கணக்குகள் உள்ளன. சென்னை நகர மண்டல அஞ்சல்வட்டத்தில் 4 லட்சத்து 38 ஆயிரம்கணக்குகள் உள்ளன.


இந்த திட்டத்தை நோக்கிஅதிகப்படியான கணக்குகளை ஈர்க்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

செல்வமகள் சேமிப்பு கணக்கில் பிறந்த குழந்தை முதல் 14வயதான சிறுமிகள் வரை இணையலாம் என்ற நிலைஇருந்தது. இனி 15 வயதுவரை இந்ததிட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம். மேலும், அபராதக் கட்டணம், பணம் செலுத்தாமை போன்ற இக்கட்டுகளால் வரும் விளைவுகளை தடுக்க ஆண்டுதோறும் ரூ.1000 வசூல் செய்யவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த தொகைசேமிப்பு கணக்கில் சேர்க்கப்பட்டு அதற்கான வட்டியும் தரப்படும்.

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்குவைத்துள்ளவர்கள் தங்களது இருப்பிடத்தை மாற்றும் போது, அந்த கணக்கு முடித்து வைக்கப்படும். கணக்கை மாற்றமாகி செல்லும் இருப்பிடத்தில் உள்ள அஞ்சலகத்துக்கு மாற்ற விரும்பினால், உரிய முகவரி சான்றினை பெற்றுக் கொண்டு கணக்கு மாற்றியளிக்கப்படும்.

5 ஆண்டுகளை நிறைவு செய்த கணக்கை கொண்ட சேமிப்புதாரர், நோய்வாய்ப்படுவதல், அசம்பாவிதங்களைசந்தித்து அபாய கட்டத்துக்கு செல்லுதல் போன்ற நிலையில் இருந்தால், அவரது கணக்கு முடித்து வைக்கப்பட்டு அவரது உறவினர் அல்லது காப்பாளரிடம் அளிக்கப்படும். 18 வயதுநிறைவு செய்தவர்கள், 10-ம் வகுப்பு முடித்தவர்கள், தங்களின் மேற்படிப்புக்காக சேமிப்புத் தொகையில் பாதிஅளவை பெற்றுக் கொள்ளலாம். 21 வயதிலோ அல்லது திருமணம் ஆன ஒரு மாதத்திலோ பெண்கள் தங்களின் கணக்கை முடித்துக் கொள்ளலாம். மேலும், வட்டிவிகிதம் ஏப்ரல்1 முதல் 8.6 சதவீதமாக்கப்படும்'' என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment