Pages

Friday, November 6, 2015

சிறப்பு சலுகையில் பொதுத்தேர்வு: விரைந்து விண்ணப்பிக்க அறிவுரை


மாற்றுத்திறனாளி, நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள்சிறப்பு சலுகையில் 10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத மருத்துவ சான்றிழுடன் விரைந்துவிண்ணப்பிக்க வேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.


10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கு தேர்வுத்துறை சார்பில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. கண்பார்வையற்றவர்கள், காது கேளாத, வாய் பேச இயலாதவர்கள், எதிர்பாராத விபத்தில் உடல் ஊனமடைந்தவர்கள், கைகால் நடுக்கம் கொண்ட 'டிஸ்லெக்சியா' நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், நரம்பியல் கோளாறு கொண்ட மாணவர்கள் அடுத்தாண்டு மார்ச்சில் நடக்க உள்ள இப்பொதுத்தேர்வு எழுத அங்கீகாரம் பெற்ற அரசு மருத்துவர்களிடம் உடல்நலக்குறைபாடு தொடர்பான மருத்துவச்சான்றிதழ்பெற்று தலைமையாசிரியர்களிடம் அளிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.

விண்ணப்பம்:

பிளஸ் 2 மாணவர்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள், 10ம் வகுப்பு மாணவர்கள் மாவட்டக்கல்வி அதிகாரிகளிடம், தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பத்தை தலைமையாசிரியர்கள் பரிந்துரை கடிதத்துடன் விரைந்து சமர்ப்பிக்க வேண்டும்.அது தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டு சிறப்பு சலுகையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

டாக்டர் சான்று:

மாவட்டகல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகள், இதர நோய் குறைபாடு உடைய மாணவர்களுக்கு வேறொரு ஆசிரியர் மூலம் தேர்வு எழுதுவது, அதற்காக கூடுதலாக ஒருமணி நேரம் ஒதுக்குவது, ஏதாவது ஒரு மொழிப்பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. விபத்தில் சிக்கி காயமடைவோர் தவிர மற்றவர்கள் கடைசி நேரத்தில் விண்ணப்பிக்கும்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. அரசு டாக்டர்களிடம் உரிய சான்றிதழ் பெற்று அம்மாணவர்கள் தற்போதே சிறப்பு சலுகையில் தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,”என்றார்.

No comments:

Post a Comment