Pages

Friday, November 20, 2015

வேலூர் மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்த கணித திறனறித் தேர்வு தள்ளிவைப்பு


தொடர் மழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கான கணிதத் திறனறித் தேர்வு வருகிற நவம்பர் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.


       இதுகுறித்து மாவட்ட அறிவியல் அலுவலர் ஜெ.ஆர்.பழனிசுவாமி வெளியிட்ட அறிக்கை:

கணித மேதை சீனிவாச ராமானுஜம் பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட அறிவியல் மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கணித திறனறித் தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை (நவ.22) நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

தொடர் மழை காரணமாக இந்தத் தேர்வு நவ. 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதுடன், தேர்வுக்கான பதிவுகள் நவ. 26ஆம் தேதி வரை நடைபெறும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment