Pages

Wednesday, September 30, 2015

தமிழகத்தை டிஜிட்டல்மயமாக்க உதவும் மைக்ரோசாப்ட் மேகக்கணினி சேவை (Cloud Computing Service): முதல்வர்ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

சென்னையில் மைக்ரோசாப்ட் நிறு வனம் அமைத்துள்ள தரவு மையத் தில் இருந்து வழங்கப்படும் மேகக் கணினி சேவையை முதல்வர் ஜெய லலிதா நேற்று தொடங்கி வைத்தார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் கணினி சார் தேவைகளுக்கானஉள்கட்டமைப்பை ஏற்படுத்த அதிகம் செலவிட வேண்டியுள் ளது. அவர்களது தரவுகளை சேமிக்கவும், பாதுகாக்கவும் வெளிநாடுகளில் உள்ள தரவு மையங்களை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.நம் நாட்டில் செயல்படும் நிறு வனங்களின் தரவுகள் நம் நாட்டி லேயே சேமித்துபாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடு நடை முறையில் உள்ளது.

அதன்படி பயனீட்டாளர்கள் அவர்களது பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தி மேகக் கணினி (Cloud Computing) சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன்மூலம் கணினிசார் கட் டமைப்புக்காக நிறுவனங்கள் செல விடும் நிதி பெருமளவு குறையும்.இந்நிலையை கருத்தில் கொண்டு மைக்ரோசாப்ட் நிறு வனம், இந்தியாவிலேயே முதல் முறையாக 3 தரவு மையங்களை அமைக்கவும், அவற்றின் மூலம் மேகக் கணினி சேவைகளைவழங்கவும் நடவடிக்கை எடுத் துள்ளது. 

அதில் ஒன்றான சென்னையில் அமைக்கப்பட் டுள்ள தரவு மையம் வழியாக மேகக் கணினி சேவையை தலை மைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தை டிஜிட்டல் மயமாக்க இந்த சேவை பெரிதும் உதவும்.இந்நிகழ்ச்சியில் மைக்ரோ சாப்ட் (இந்தியா) நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்கரண் பஜ்வா கலந்து கொண்டார். அவரிடம் முதல்வர், ‘‘தமிழகத்தில் மைக்ரோசாப்ட் தொடங்கியுள்ள சேவையை வரவேற்பதுடன், பெருமகிழ்ச்சி அடைகிறேன்.மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்’’ என்றார். 

No comments:

Post a Comment