Pages

Thursday, September 24, 2015

இயற்கை முறையில் கிருமிநாசினி: அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

கோவை : தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க, இயற்கை கிருமிநாசினி தயாரித்து, அரசு பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.ஆமதாபாத், 'டிசைன் பார் சேஞ்ச்' அமைப்பு சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான, 'புராஜக்ட் எக்ஸ்போ' போட்டி நடத்தப்படும். இந்தாண்டு தேசிய அளவில் நடக்கும் இப்போட்டியில், கோவை ஆறுமுகக்கவுண்டனுார் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக, பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள், நந்தகுமார், தனலட்சுமி, தர்ஷினி, ஸ்ரீமதி, அருண் ஆகியோர், இயற்கை கிருமிநாசினியை கண்டுபிடித்துள்ளனர்.


புதிதாக கண்டுபிடித்துள்ள இயற்கை கிருமிநாசினி குறித்து மாணவர்கள் கூறியதாவது: அன்றாடம் பயன்படுத் தும், 'சோப்', 'ஷாம்பூ' உள்ளிட்ட கிருமிநாசினிஅனைத்தும் ரசாயனங்களால் செய்யப்பட்டவை. இவற்றால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு தோல் நோய்களும் வருகின்றன. இவற்றை கணக்கில்கொண்டு இயற்கை முறையில், கிருமி நாசினி தயாரித்துள்ளோம். செம்பருத்தி, சோற்றுக்கற்றாழை, வேப்பிலை, திருநீற்றுப்பத்து, கற்பூரவள்ளி ஆகியவற்றை கலவையாக்கி, இயற்கை கிருமி நாசினி தயாரித்துள்ளோம். இவை அதிக நாள் மக்கள் பயன்படுத்த வசதியாக, எலுமிச்சையை சேர்த்துள்ளோம்.

இயற்கை கிருமி நாசினியால் கையும் சுத்தமா கும்; உடலுக்கும் எவ்வித பாதிப்பும் இருக்காது.
இவை எங்கள் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயன்படுத்த, நாங்களே தயாரித்து கொடுத்துள்ளோம். இந்த கண்டுபிடிப்புக்கு பள்ளி யின் கணித ஆசிரியர், சத்யபிரபா தேவி உதவினார்.இவ்வாறு, மாணவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment