Pages

Thursday, December 10, 2015

அச்சு துறை பணி ஜன., 9ல் தேர்வு


அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில், இயந்திரம் இயக்குபவர், இளநிலை புத்தகம் கட்டுனர், எலக்ட்ரீஷியன், உதவி வெப் ஆப்செட் டெக்னிஷியன் உட்பட பல்வேறு பதவிகளுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


இப்பதவிகளுக்கு விண்ணப்பித்தோருக்கு, 2016 ஜன., 9ல், சென்னையில், பொது அறிவுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.காலை, 10:00 மணி முதல், நண்பகல், 1:00 மணி வரை தேர்வு நடைபெறும். வினாக்கள், 10ம் வகுப்பு அளவில் இருக்கும்.தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தபாலில் அனுப்பப்படும். விவரங்களை,http://www.stationaryprinting.tn.gov.inஇணையதள முகவரியில் அறியலாம். 

No comments:

Post a Comment