Pages

Wednesday, December 23, 2015

பாரதியார் பல்கலை. தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கு நாளை தேர்வு உண்டு


கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி வழியில் பயிலும் மாணவர்களுக்கு மீலாது நபி நாளில் (டிசம்பர் 24) தேர்வு நடைபெறும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.



 பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி வழியில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், மேலாண்மைப் படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த 11-ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கேரளம், கர்நாடகம், மும்பை, தில்லி உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் துபை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதி வருகின்றனர்.

 இந்த நிலையில் மீலாது நபிக்காக வரும் 24-ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில கல்வி நிறுவனங்களில் அன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 ஆனால், பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையம் மீலாது நபி அன்று திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் இதில் மாணவர்கள் தவறாமல் கலந்து கொண்டு தேர்வு எழுத வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment