Pages

Tuesday, August 25, 2015

அங்கன்வாடி பயிற்சிக்கு ரூ.3.31 கோடி

           ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மேம்பாட்டு திட்டப்படி, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, 3.31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு, 2013 - 14ல், 3.02 கோடி; 2014 - 15ல், 3.31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 


இதில், 90 சதவீதம், மத்திய அரசு நிதி. இந்த நிதியில், 22 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள், 548 குழுக்களாக பிரிக்கப்பட்டும், அங்கன்வாடி உதவியாளர்கள், 24 ஆயிரம் பேர், 485 குழுக்களாக பிரிக்கப்பட்டும் பயிற்சி அளிக்கப்படும்.அத்துடன், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலியில், மண்டல பயிற்சி மையம், 12.50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment