Pages

Tuesday, December 8, 2015

சென்னையில் கனமழை கொட்ட உள்ளதாக பிபிசி வானிலை (BBC Weather) எச்சரிக்கை


லண்டன் : சென்னையில் தற்போது தான் மழை சற்று ஓய்ந்து மக்கள் நிம்மதி கொண்டிருக்கும் நிலையில், வரும் புதன்கிழமை ( 09ம் தேதி) முதல், சென்னையில் கனமழை கொட்ட உள்ளதாக பிபிசி வானிலை (BBC Weather) எச்சரிக்கை விடுத்துள்ளது.


பிபிசி வானிலை பக்கத்தில், வரும் புதன்கிழமை ( 9ம் தேதி) துவங்கி அடுத்த புதன்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

09ம் தேதி மற்றும் 10ம் தேதி இடியுடன் கூடிய மழையும், 11ம் தேதி முதல் கனமழையும், 12 முதல் 16ம் தேதி வரை காலை நேரத்தில் கனமழை பெய்யும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment