Pages

Saturday, December 5, 2015

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அரசு பஸ்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கட்டணம் கிடையாது; ஜெயலலிதா அறிவிப்பு


சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அரசு பஸ்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கட்டணம் கிடையாது என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போர்க்கால நடவடிக்கை
கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிப்பு அடைந்துள்ள மக்கள் எனது உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்கால நடவடிக்கைகள் காரணமாக வெள்ளப்பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதுடன் மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. இதுவன்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் இல்லங்களிலேயே தங்கி உள்ளவர்களுக்கும் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
4 நாட்கள் கட்டணம் கிடையாது
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தற்போது இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வருகிறது. மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் இந்த தருவாயில் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் உள்ளூர் பயணங்கள் மேற்கொள்ளும் அவசியம் ஏற்படும்.
எனவே, இதற்கு ஏதுவாக 5-12-2015 (இன்று) முதல் 8-12-2015 ஆகிய நான்கு நாட்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும் பயணம் செய்யும் பயணிகளிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படக்கூடாது என நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த நான்கு நாட்களும் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பஸ்களில் கட்டணம் ஏதுமின்றி மக்கள் பயணம் செய்யலாம்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment