Pages

Thursday, March 31, 2016

அகில இந்திய தேசிய திறனறிவு போட்டியில் தேர்ச்சி பெற்ற காரைக்கால் அரசுப் பள்ளி மாணவர்கள் !!!


அகில இந்திய தேசிய திறனறிவு போட்டியில் தேர்ச்சி பெற்ற காரைக்கால் அரசுப் பள்ளி மாணவர்களை கலெக்டர் கரிகாலன் பாராட்டினார்.

             அகில இந்திய தேசிய திறனறிவு தேர்வில், காரைக்கால் வடமறைக்காடு அரசு தொடக்கப்பள்ளியை சேர்ந்த 16 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இத்தேர்வுகள் நான்கு பாடப்பிரிவுகளில் நடந்தது.


கணிதம், ஆங்கிலம், அறிவியல், கணிப்பொறி அறிவியல் ஆகிய பிரிவுகளில், வடமறைக்காடு பள்ளி மாணவர்ரகள் 12 பேர் தேர்வாகினர்.அதையொட்டி, இப் பள்ளிக்கு, 'கோல்டன் ஸ்கூல் அவார்டு' வழங்கப் பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன், ஆசிரியர்கள் நிர்மலா, வசந்தி, விக்னேஸ்வரி ஆகியோருக்கு ஊக்கப்பரிசு வழக்கப்பட்டது.விருது பெற்ற மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களை கலெக்டர் கரிகாலன் பாராட்டினர்.இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அதிகாரி வெற்றிவேல், கல்வித்துறை துணை வட்ட ஆய்வாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment