Pages

Tuesday, March 22, 2016

பிளஸ்-2 வேதியியல் தேர்வில் கருணை மதிப்பெண் 6 வழங்க

பள்ளிக்கல்வித்துறை முடிவு பிளஸ்-2 வேதியியல் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 2 கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சி செய்திருந்தால் அந்த மாணவருக்கு கருணை மதிப்பெண் 6 கொடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.  தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., என்ஜினீயரிங், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு கிடையாது. அதன் காரணமாக அனைத்து தொழில் கல்வியில் சேர பிளஸ்-2 வேதியியல் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 பிளஸ்-2 வேதியியல் தேர்வு கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சுற்றி வளைத்து கேட்டதாகவும், கடந்த 10 வருடங்களில் பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கேட்கப்படவில்லை என்றும் கூறி மாணவர்கள் ஏராளமானவர்கள் கண்ணீர் வடித்தனர். தேர்வை சரியாக எழுதாத சிலர் தற்கொலை செய்துகொண்டனர்.  எனவே, வேதியியல் தேர்வை மீண்டும் நடத்தவேண்டும் என்று பல மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர்.  இந்த நிலையில் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-  பிளஸ்-2 வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்வியில் 17-வது வினா சரியாக கேட்கப்படவில்லை.  மேலும் 5 மதிப்பெண் கேள்வியில் 70-ம் எண் கேள்வி தவறாக கேட்கப்பட்டு இருந்தது. கேள்வியில் 11 என்று இருப்பதற்கு பதிலாக ரோமன் எழுத்தில் கேட்கப்பட்டு இருந்தது. ரோமன் எழுத்தில் இரண்டு என்றால் அது கால்சியத்தை குறிக்கும். ரோமன் எழுத்து அல்லாமல் 11 என்றால் அது காப்பரை குறிக்கும்.  இந்த இரு வினாக்களுக்கும் பதில் அளிக்க முயற்சி செய்திருந்தால் 1 + 5 மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. மொத்தத்தில் 6 மதிப்பெண் வழங்கப்பட இருக்கிறது. இதை கருணை மதிப்பெண் என்றும் கூறலாம்.  பிளஸ்-2 தமிழ், ஆங்கிலம், அக்கவுண்டன்சி, வணிகவியல் ஆகிய விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. இந்த விடைத்தாள்கள் மதிப்பீடு செய்த பின்னர், வேதியியல் விடைத்தாள்கள் ஏற்கனவே திட்டமிட்டு உள்ளபடி பிறகு திருத்தப்படும்.  இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment