Pages

Saturday, July 18, 2015

சிறப்பு அவசர ஆலோசனை கூட்டம் :18.7.2015

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் - வேலூர் மாவட்டம் சார்பாக ஜூலை 22 - ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு 2015-16 - ம் ஆண்டிற்கான கலந்தாய்வு நெறிமுறைகளில் உள்ள முரண்பாடுகளை எதிர்த்து  எழுச்சியோடு நடைப்பெறவுள்ள ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடத்துவது மற்றும் குறைந்தது 2000 ஆசிரியர்களை பங்கேற்க செய்வது குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைப்பெறவுள்ளது.

நாள் : 19.7.2015

இடம்: அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி,வேலூர்

நேரம் : காலை 10 மணி

இச்சிறப்பு கூட்டத்திற்கு
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க
மாநில தலைவர்
 👑 திரு.கு.தியாகராஜன்,

மாநில பொதுச் செயலாளர்

👮 திரு.ஏ.ரமேஷ் மற்றும்

மாநில பொருளாளர்

👳திரு.ப.உதயகுமார்

ஆகியோர் வருகை தந்து தங்கள் மேலான ஆலோசனைகளை வழங்க இசைந்துள்ளனர்.

நம் மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில,மாவட்ட,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள்...

👔 G.D.பாபு,மாவட்டச் செயலாளர்,வேலூர்.

No comments:

Post a Comment